லேபிள்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

எலும்புகளை குறைந்த வயதிலேயே பலவீனமாக்கும் பழக்கங்கள்.

தற்போதைய வாழ்க்கை முறையில் பலருக்கும் எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி விடுகிறது. இதனால், பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

எலும்புகள் இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன?

சோம்பேறித்தனம்

சோம்பல் அதிகம் இருந்தால், உடலின் இயக்கம் குறைகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவதில், உடல் இயக்கம் முக்கிய பங்களிக்கிறது. எனவே, முடிந்த அளவு முதலில் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும்.

உப்பு

அதிக உப்பை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அதிக உப்பை சாப்பிட்டாலும், உங்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தியைக் குறையலாம் என்று நம்பப்படுகிறது.

புகைப்பிடிப்பது

எலும்பு ஆரோக்கியத்தை பொறுத்தவரை புகைபிடிப்பவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதனால் உங்கள் எலும்புகள் பாதிக்கப்படும். புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமல்ல, உங்கள் எலும்புகளையும் பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.

சூரிய ஒளி முக்கியம்

இன்றைய வாழ்க்கை முறையில், நம் உடலின் மீது சூரிய ஒளி படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பலரின் உடலில் வைட்டமின்-டி குறைபாடு உள்ளது. என்ன தான் செயற்கை மருந்து வகைகளை சாப்பிட்டாலும், வலுவான எலும்புகளுக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது.

தூக்கமின்மை

நிம்மதியான தூக்கம் என்பது மனிதனுக்கு மிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.



--

புதன், 26 பிப்ரவரி, 2025

பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்த கசிவா?

பொதுவாக சிலருக்கு பல் துலக்கும்போது இரத்த கசிவு ஏற்படுவதுண்டு.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப் படுகின்றது.

ஈறுகளில் இரத்தம் கசிவதற்கு மோசமான வாய் ஆரோக்கியம் முதன்மையான காரணமாக இருக்கும்.

பற்களில் கறைகள் அதிகமா சேரும் போது, ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கமடைந்து, பின் இரத்தக் கசிவை உண்டாக்கும். இதனால் மிகுந்த வலியும் ஏற்படும்.

இதிலிருந்து விடுபட இயற்கை முறையில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

உடலில் வைட்டமின் சி குறைபாட்டினாலும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். எனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வைட்டமின் ஏ குறைபாடும் வாய்ப்புண், ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆப்ரிக்காட் பழத்தில் பீட்டா-கரோட்டீன் அளவுக்கு அதிகமாக உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படும். எனவே ஆப்ரிக்காட் பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

பற்களின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது. இத்தகைய கால்சியம் பாலில் அதிகம் உள்ளது. எனவே தினமும் தவறாமல் 2 டம்ளர் பால் குடியுங்கள். இதனால் ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.

கேரட்டிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அத்தகைய கேரட்டை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக கடித்து நன்கு மென்று சாப்பிட்டால், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் ஈறுகளில் இரத்தம் கசிவது தடுக்கப்படும். ஏனெனில் இவற்றில் வைட்டமின் சி, ஏ போன்றவை அதிகம் உள்ளது.

வெள்ளரிக்காய் வாயில் உள்ள அமிலத்தன்மையை சீராக பராமரிக்க உதவும். வாயில் அமிலத்தன்மை அதிகமானால், அதனால் பற்கள் மற்றும் ஈறுகள் தான் முதலில் பாதிக்கப்படும். எனவே வெள்ளரிக்காயை சாப்பிட்டு வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், எலுமிச்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடலில் வைட்டமின் சி குறைபாட்டினைத் தடுத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் செய்ய முடியும்.

ஈறுகளில் இரத்தக்கசிவு உள்ளவர்கள், தினமும் ஒரு பௌல் பச்சை காய்கறி சாலட் சாப்பிடுவதன் மூலம், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது குறையும்.

கிரான்பெர்ரி பழங்களும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை நிறுத்த உதவும். ஏனெனில் கிரான்பெர்ரி பழங்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. இது வாயில் உள்ள அதிகப்படியான பாக்டீரியாக்களை அழிக்கும். எனவே இப்பழம் கிடைத்தாலோ அல்லது ஜூஸ் கிடைத்தாலோ, வாங்கிப் பருகுங்கள்.

அருகம்புல் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் பருகுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குறிப்பாக ஈறுகளில் இரத்தம் கசிபவர்கள், இந்த ஜூஸைக் குடித்தால், இரத்தக்கசிவு உடனே நிற்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கி, உடலும் நன்கு சுத்தமாகும்.



--

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

குழந்தைகளுக்கு வரலாம் கேட்டராக்ட்' பாதிப்பு; பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - கண்கள் பத்திரம்.

``கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு என்பது பெரியவர்களைத் தாக்கும் எனக் கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால், அது குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கூட பாதிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படுகிற இந்தக் கண்புரை பாதிப்பானது, ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ இருக்கக்கூடும். சில வேளைகளில் அது பரம்பரையாகத் தொடரும் பாதிப்பாக இருக்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அது குறித்து அவர் தரும் விளக்கமான தகவல்கள் இங்கே...

 சிறப்பு மருத்துவர் வசுமதி

``சில குடும்பங்களில் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ மிகச் சிறிய வயதிலேயே கண்புரை பாதிப்பு ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் கண்புரை பாதிப்பு இருக்கக்கூடும். சொந்தத்தில் திருமணம் செய்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரக்கூடும். கண்ணின் பாப்பா எனப்படும் பகுதியில் வெண்மையாக ஒரு படலம் போன்று தெரியும். அதை வைத்து கண்புரை பாதிப்பைச் சந்தேகிக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை... அரசுத்திட்டம் அறிவீர்களா?

`ராஷ்டிரியபால ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்' (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) எனப்படும் ஒன்றிய அரசுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே அதற்கு முழுமையான கண் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறது. கண்ணில் புரையோ, வேறு ஏதேனும் பிரச்னைகளோ, புற்றுநோயோ இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிய உதவுகிறது இந்தப் பரிசோதனை.

பிறக்கும்போதே ஒரு குழந்தைக்கு கண்ணில் புரை பாதிப்பு இருந்தால், அது கடந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த சோம்பேறிக் கண் பாதிப்பில் கொண்டுபோய்விடும். அதுவும் தீவிர நிலை சோம்பேறிக் கண் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகிவிடும்.

கண்புரை பாதிப்பு உள்ள அந்தக் கண்ணில் பார்வை வளர்ச்சியே இருக்காது. இதனால் இது கண்டுபிடிக்கப்பட்டால் குழந்தை பிறந்த அடுத்தடுத்த நாள்களிலேயேகூட அறுவைசிகிச்சை செய்து கண்புரையை நீக்குவதுண்டு. பெரியவர்களுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் லென்ஸ் வைப்பதைப்போல குழந்தைகளுக்கு முதல் ஒரு வருடத்தில் வைக்க முடியாது.

குழந்தையின் கண்களின் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது. தவிர, குழந்தையின் கண்பார்வையின் பவரானது மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரு வருடம் ஆன பிறகு, குழந்தையின் கண்களைப் பரிசோதித்துவிட்டு, பிறகு அதன் கண்களில் லென்ஸ் வைப்போம். அதன் பிறகு, நன்றாக உள்ள இன்னொரு கண், சோம்பேறிக் கண்ணாக மாறாமலிருக்க சிகிச்சை அளித்துக் காப்பாற்றப்படும். ஒருவேளை இரண்டு கண்களிலும் கண்புரை இருந்து அகற்றப்பட்டிருந்தால் குழந்தைக்கு கண்ணாடி கொடுத்து அணியப் பழக்கப்படுத்தப்படும்

அம்மாக்கள் கவனத்துக்கு...

பரம்பரைத் தன்மையை மீறி இந்தப் பிரச்னை வர குழந்தையின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ருபெல்லா எனப்படும் மணல்வாரி அம்மை பாதிப்பும் ஒரு காரணம். தாய்க்கு ருபெல்லா பாதித்திருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண்புரையும், விழித்திரை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின் கண் சிறியதாக இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கு Congenital Rubella Syndrome (CRS) என்று பெயர். இந்த பாதிப்பு உள்ள குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், காது கேட்பதில் பாதிப்பும் கூட இருக்கக்கூடும். அதனால்தான் திருமணத்துக்கு முன்பே இளம் பெண்களுக்கு எம்.எம்.ஆர் தடுப்பூசி போட வலியுறுத்தப் படுகிறது. இது போடப்படும் பட்சத்தில் கர்ப்ப காலத்தில் அந்தப் பெண்ணுக்கு இந்த அம்மை பாதிப்பது தவிர்க்கப்படும்.

 Eye Issues (Representational Image)

இதுதவிர, சம்பந்தப்பட்ட அந்த கர்ப்பிணி ஏதேனும் ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்திருந்தாலும், கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே எடுத்திருந்தாலும், வைட்டமின் குறைபாடு இருந்தாலும்கூட அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. கண்புரை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு அதை அறுவைசிகிச்சை மூலம் நீக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவரிடம் செக்கப்புக்கு அழைத்து வர வேண்டியது மிகவும் அவசியம்."



--

புதன், 19 பிப்ரவரி, 2025

மண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

பல வித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள மண் பாண்டங்கள் உதவி புரிகிறது. இந்த மண் பாண்டங்கள் கோடை காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலங்களுக்கும் ஏற்றது.

மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.

மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள் நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில் அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள் மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண் பாண்டங்களே சிறந்தவை.



--

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

பட்டுப் புடவையைஅலசுவது எப்படி?

பெண்களின் ஆசைக்கான பட்டியலில் முதன்மையான இடம், புடவைகளுக்கு உண்டு. அதிலும், பட்டுப் புடவை என்றால் எப்போதும் ஸ்பெஷல் தான்.

பட்டுப் புடவையை ஆசைப்பட்டு வாங்கும் பெண்களுக்கு அதைப் பராமரிப்பதுதான் பெரிய வேலை. பட்டுப் புடவைகளை துவைக்கக் கூடாது என்றும், வெளியில்தான் டிரை வாஷ் கொடுத்து வாங்க வேண்டும் என்றும் பலரும் நினைத்திருப்பர். வீட்டிலேயே எளிய முறையில் பட்டுப் புடவையை வாஷ் செய்வதற்கான வழிகள் இங்கே...

தேவையான பொருள்கள்:

- வாளி

- குளிர்ந்த நீர்

- வாஷிங் லிக்விட்

1. பட்டுப் புடவைகளை அலசுவதற்குக் வெந்நீரோ, சாதாரண தண்ணீரோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. குளிர்ந்த நிலையில் உள்ள தண்ணீர்தான் பயன்படுத்த வேண்டும்.

2. அரை வாளி குளிர்ந்த நீரில், மைல்டான வாஷிங் லிக்விட்டை தேவையான அளவு சேர்த்துக் கலக்கவும். உடனே இதில் பட்டுப் புடவையை ஊறவைக்கக் கூடாது. முன்னதாக, ஒரு சிறிய பஞ்சை அந்த வாளி நீரில் விட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து, அதில் நிறம் ஏதேனும் மாறியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை செக் செய்துகொண்டு, பின்னர் பட்டுப்புடவையை வாளியில் ஊறவைக்க வேண்டும்.

3. பட்டுப்புடவையை ஊறவைக்கும் முன், புடவை முழுக்க விசிறி மடிப்பாக மடித்து, பார்டரை மொத்தமாகச் சேர்த்து நூல்/கயிற்றால் முடிச்சிட்டுக் கட்டிவிடவும். அதேபோல, முந்தானைப் பகுதியையும் விசிறி மடிப்பாக மடித்து, கட்டிவிடவும். இப்போது, பார்டர், முந்தானை தவிர, புடவையின் உடல் பகுதியை மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும். இப்படி செய்வதன் மூலம் பார்டர், முந்தானையில் உள்ள சாயம் புடவையில் பட்டுப் பாழாகாமல் தவிர்க்கலாம்.

4. புடவையின் உடல் பாகம் முழுக்கத் தண்ணீரில் மூழ்கும் வகையில் பிரித்து, விரித்துவிடலாம். ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்க வேண்டாம்.

5. பின், மற்றொரு வாளியில் குளிர்ந்த தண்ணீர் கொண்டு, அதில் புடவையை மென்மையாக அலசி எடுக்கவும். அலசும்போது கறைகள் ஏதேனும் இருந்தால், பிரஷ் இல்லாமல் கைகளால் தேய்க்கவும். கவனத்தில் கொள்க... அலசிய பின் பிழியவோ, கசக்கவோ கூடாது.

6. அலசி முடித்த பின்னர் தண்ணீரை வடியவிட்டு, நிச்சயமாக நிழலில்தான் உலர்த்த வேண்டும். வெயிலில் நேரடியாகக் காயவைத்தால் நூல் பாதிக்கப்பட, நிறம் மாற வாய்ப்புள்ளது. முடிந்தால் டவல் டிரை செய்த பின் உலர்த்தலாம்.



--

வியாழன், 13 பிப்ரவரி, 2025

புரோட்டீன் பவுடர்என்றால் என்ன? இதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.


புரதம்: நம் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. நம் உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் உற்பத்தியாக, குணமடைய, செல்கள் வளர, புதுப்பித்துக்கொள்ள புரதம் அவசியம்.

தேவையான அளவு புரதம் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பு, எடை குறைப்பு மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

இறைச்சி, முட்டை, பால், மீன், சோயா என பல்வேறு உணவுகளில் இயற்கையாகவே புரதச்சத்து உள்ளது.

புரோட்டீன் பவுடர்:

விலங்கு அல்லது தாவர வகைகளில் இருந்து புரத சத்தை மட்டும் பிரித்து எடுப்பது தான் இந்த புரோட்டின் பவுடர்.

மொத்தம் 9 வகையான புரோட்டின் பவுடர் உள்ளன:

1. முட்டை புரோட்டீன் (Egg Protein)

2. வே புரோட்டீன் (Whey Protein)

3. பட்டாணி புரோட்டீன் (Pea Protein )

4. பிரவுன் அரிசி புரோட்டீன் (Brown Rice Protein)

5. சணல் விதைகள் புரோட்டீன் (Hemp Protein )

6. தாவர புரோட்டீன் (Plant Protein )

7. சோயா புரோட்டீன் (Soy Protein)

8. பாதாம் புரோட்டீன் (Almond Protein)

9. கேசீன் புரோட்டீன் (casein Protein)

விலங்கு வகையில் 2 வகையான பாலால் ஆன புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது:

வே புரோட்டீன் மற்றும் கேசின் புரோட்டீன்.

தாவர வகையின் பிரிவுகள்

- அரிசி, பட்டாணி, சோயா, பாதாம், சணல் விதை போன்றவற்றிலிருந்தும் புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு ஸ்கூப்பில் 20-30 கிராம் புரோட்டீன் இருக்கும். அவரவர் தேவைக்கு ஏற்றார் போல (பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் பரிந்துரைக்கும் புரோட்டீன் அளவு) ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளலாம்.

யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

1. உணவு மூலம் சரியான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

3. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலும் உடற்பயிற்சி செய்து தசைகளின் வளர்ச்சி ஆதரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் புரோட்டீன் பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

DRI (Dietary Reference Intake) அளவுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, 75 கிலோ எடையுள்ள நபர் - 75 கிலோ * 0.8கிராம்= 60 கிராம் புரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை, நீங்கள் மசில் பிள்டிங் செய்பவராக இருந்தால், தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்க புரோட்டீன் அளவு ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1.4-2.0 கிராம் வரை மாறுபடும்.


--

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

உங்கள் உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் முகமே உதவி செய்யும். மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதே போல, அகத்தின் ஆரோக்கியமும் முகத்தில் தெரியும். உங்கள் முகம் உங்கள் உடல்நலத்தை பற்றி கூறுவதென்ன?

என்பது குறித்து இங்கு காண்போம். உங்கள் உடலில், நீங்கள் நாளொன்றுக்கு பல முறை பார்ப்பது, பராமரிப்பது உங்கள் முகம் தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒருவரைப் பற்றிய முழு விவரங்களையும் முகத்தின் வழியே அறிந்து கொள்வது வழக்கம். முகத்தைப் பார்த்தே ஒருவரை பற்றி கூறிவிடலாம் என்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கின்றது. ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது மனம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் முகமும் மிகவும் சோர்வுற்றதாக தோன்றுகிறது. இதற்கு நேர்மாறாக, மகிழ்ச்சியான காலங்களில், திருப்தியாக இருக்கும் சமயத்தில் முகம் ஒளிரும். எனவே உங்கள் உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் முகம் உதவி செய்யும், அதற்காக மருத்துவர் பகிர்ந்த சில காரணிகளை பார்க்கலாம்.

மஞ்சள் நிறத்தில் முகம் மற்றும் கண்கள்:

முகமும், கண்களும் மஞ்சள் நிறத்தில் இருப்பது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். உங்கள் உடலில் ஏராளமான கழிவு பொருட்கள் சேர்க்கையும், சிவப்பு ரத்த அணுக்கள் சிதைவதாலும் முகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகத் தெரிகின்றன. மஞ்சள் காமாலை நோயால், வைரஸ் தொற்று (ஹெபடைடிஸ், மோனோநியூக்ளியோசிஸ்), கல்லீரல், பித்தப்பை, அல்லது கணையக் கோளாறுகள் அல்லது லிவர் சிரோசிஸ் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

முகத்தில் உள்ள முடி உதிர்தல்:

அலோபேஷியா என்பது அதிகப்படியான முடி உதிர்வைக் குறிப்பதாகும். பொதுவாக பெண்களிடையே ஏற்படும் அதிகப்படியான கூந்தல் உதிர்வைக் குறிக்கும் இந்த கோளாறு, கூந்தல் அல்லது தலைமுடி என்பதைத் தாண்டி, புருவம், கண்ணிமைகள் மற்றும் தாடி என்றும் பாதிக்கிறது. புருவ அடர்த்தி குறைதல், கண்ணிமைகள் அடிக்கடி உதிர்வது அல்லது திட்டு திட்டுகாக தாடி அல்லது மீசையில் முடி உதிர்தல் போன்றவை அலோபேஷியா அரேட்டா (alopecia areata) பாதிப்பை சுட்டிக் காட்டுகிறது.

இதற்கான காரணம், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு. இது உங்கள் முடிக் கற்றைகளை பாதிக்கிறது. எனவே, முகத்தில் இருக்கும் இமை, புருவம், தாடி போன்ற இடங்களில் அதிகப்படியான முடி உதிர்வு காணப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் டானிக்குகள் ஆகியவற்றை உட்கொள்வது, இழந்த முடிகள் மீண்டும் முளைக்க உதவும். வீக்கமான கண்கள் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லை என்றாலே கண்களில் அதன் பாதிப்புத் தெரியும். இதற்கான காரணம், கண்களுக்குக் கீழே திரவம் தேங்குவது தான். இது கண்கள் வீங்கிய தோற்றத்தைக் கொடுக்கும்.

கண்கள் வீக்கம் என்பதற்கான சில காரணங்கள்:

தூக்கமின்மை, அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உண்ணுதல், ஹார்மோன் மாற்றங்கள், வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை, முதுமை - உங்கள் கண் இமைகளை ஆதரிக்கும் தசைகள் வயதாகும் போது தளர்வடையும், ஒவ்வாமை, மேக்கப், சோப்பு அல்லது கிளென்சர் பயன்படுத்துவது, வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது.

முகத்தில் முறையற்ற முடி வளர்ச்சி:

தேவையில்லாத இடங்களில் முடி வளர்வதும், தேவையான இடங்களில் வளராமல் இருப்பதும், எரிச்சலூட்டுவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத விதமாக, ஆண்களுக்கு காதுகளைச் சுற்றியும், பெண்களுக்கு புருவங்கள் அல்லது கன்னத்தைப் சுற்றியும் காணப்படலாம். இது தீவிரமானது அல்ல. அதே போல, அப்படியே விட்டுவிடவும் முடியாது. முகத்தில் முறையற்ற முடி வளர்ச்சி, தோற்றத்தை பாதித்தாலும், பெண்களில் இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உடல்நலக் குறைப்பாடு இருப்பதற்கான அறிகுறியாகும்.

வறண்ட மற்றும் இரத்தம் கசியும் உதடுகள்:

செதில் செதிலாக காணப்படும் வறட்சியான அல்லது உலர்ந்த உதடுகள் குளிர்காலத்தில் அதிகமாக காணப்படுகின்றன. பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், லிப் க்ரீம்கள் உங்கள் உதடுகளை பாதுகாக்கவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு, ஒவ்வாமை அல்லது ஸ்டெராய்டுகள் போன்ற மருந்தின் எதிர்வினை போன்ற சில உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இது காணப் படுகிறது.



--

இறப்புக்கு பின்னர்மனிதர்கள் கண் தானம் அளிப்பது போன்று ரத்த தானம் அளிக்க இயலாலதது ஏன்?

மனித உடலிலுள்ள திசுக்களின் இறப்பு , நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்...

Popular Posts