லேபிள்கள்

திங்கள், 16 செப்டம்பர், 2024

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம்.

கண்ணாடி விரியன்:-

பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:-

வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்யும்.

தேள்:-

கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:-

கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:-

ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:-

மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:-

வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:-

தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை, மாலை பருகுக செய்யவும்.

பூரான்:-

பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:-

கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.



--

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

அதிகமான லெமன் ஜுஸ் நல்லதா? கெட்டதா?

கோடை வந்துவிட்டால் பலருக்கும் பிடித்த பானம் எலுமிச்சை ஜூஸ்.

அடிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க ஒரு கிளாஸ் ஜில் என்று லெமென் ஜூஸ் குடித்தால் போது, அடுத்த நொடியே உடலில் உற்சாகம், புது தெம்பு வந்துவிடும். இதனால் அடிக்கடி லெமென் ஜூஸ் அருந்துபவர்களும் உண்டு. ஒரு நாளைக்கு 4-5 கிளாஸ்க்கு மேல் சர்வ சாதாரணமாக லெமென் ஜூஸ் எடுத்துக்கொள்வது உண்டு.

எலுமிச்சையில் அமிலத்தன்மை உள்ளதால் இது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் இருக்கும். அது பற்றித் தெரிந்துகொள்வோம்.

எலுமிச்சை பொதுவாக உடலுக்கு நல்லது என்றுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அளவுக்கு மீறும் போது அது ஆபத்தாக மாறிவிடலாம். காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு அருந்தலாம். அது உடல் எடையைக் குறைக்க, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அதில் உள்ள அமிலத்தன்மை எலும்புகளைப் பாதிக்கச் செய்யலாம். மேலும் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் குடிப்பது பல்லின் எனாமலை பாதிக்கும். இதனால் பற்கூச்சம், பற்சிதைவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

வயிறு செரிமான குறைபாடு, எதுகளிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்திவிடும். அது அவர்களின் செரிமான மண்டல பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் அருந்தும் போது குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். அளவுக்கு அதிகமானால் தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

சரி, ஒரு நாளைக்கு எவ்வளவு ஜூஸ் அருந்தலாம் என்று கேள்வி எழலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு எலுமிச்சை பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும். உடலின் நீர்ச்சத்து பாதுகாக்கப்படும். முடி முதல் இதயம் வரை பல்வேறு விஷயங்களுக்கு வைட்டமின் சி அவசியம். வைட்டமின் சி நீரில் கரையக் கூடிய வைட்டமின் என்பதால் தினமும் அதை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. எனவே, தினமும் லெமென் ஜூஸ் அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல், சிறிது உப்பு சேர்த்து எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஒன்று, இரண்டு கிளாசுக்கு மேல் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது!



--

திங்கள், 9 செப்டம்பர், 2024

காதில் நுழைந்த பூச்சியை எடுப்பது எப்படி? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.

காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உடனடியாக காதினுள் எண்ணெய்யையோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைபட்டு பூச்சி உடனடியாக இறந்துவிடும் அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு.

ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும் பூச்சியின் காலையோ, உடம்பையோ பிடித்து இழுக்கக்கூடாது.

ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.

இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்பு தான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும் அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப்பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்துவிடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளா விட்டால் ஆபரேஷன் வரை போய் முடியும்.



--

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன், ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவிதமான ஊட்டச் சத்துக்களும் அவை நிரம்பியுள்ளன.

பழம் விதைக்கு ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுவதால், விதைகளை உட்கொள்வதால் நமது ஆரோக்கியத்திற்கும் சில நன்மைகள் உள்ளன.

நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்க உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய விதைகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

சிறந்த சருமத்திற்கு தர்பூசணி விதைகள்

மிருதுவான, இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும், தர்பூசணி ஒரு சூப்பர் குளிர் பழமாகும். இது கோடைகாலத்தையும் அதனுடன் வரும் அனைத்து மகிழ்ச்சியான அதிர்வுகளையும் நமக்கு நினைவூட்டுகிறது. பழங்களை உண்ணும் முன் கருமையான விதைகளை அகற்றும் பழக்கத்தை நாப் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆனால் தர்பூசணி விதைகளில் வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக முகப்பருவை குணப்படுத்தவும், ஒட்டுமொத்தமாக சிறந்த சருமத்தைப் பெறவும் பயன்படுகிறது.

ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு பப்பாளி விதைகள்

சிறந்த ருசிக்கு கூடுதலாக, பப்பாளி ஒரு சத்தான பழம். அதன் நன்மைகள் சந்தேகத்திற்கு இடமின்றி அறியப்படுகின்றன. மற்ற பழங்களைப் போலவே, நாம் சாப்பிடுவதற்கு முன்பு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம் அல்லது தற்செயலாக அவற்றில் ஒன்றைக் கடிக்கிறோம். பப்பாளி விதைகளில் பப்பெய்ன் எனப்படும் நொதிகள் நிறைந்துள்ளன. இது செரிமான திறன்களை அதிகரிக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு மாதுளை விதைகள்

ஒரு மாதுளையைத் திறப்பது நிறைய வேலையாகத் தோன்றினாலும், பழத்திலிருந்து நாம் பெறும் சாறு எப்போதும் திருப்தி அளிக்கிறது. குளிர்ச்சியான இந்தப் பழத்தில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளன. மறுபுறம், விதைகள் நல்ல ஆரோக்கியத்தின் சிறந்த ஆதாரம் மற்றும் எடை குறைக்க உதவும்.

இருதய ஆரோக்கியத்திற்கு அவகேடோ விதைகள்

வெண்ணெய் பழங்களில் ஆரோக்கியமான பழங்களில் ஒன்று என்று சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும், வெண்ணெய்ப்பழ விதைகள் பயன்படுத்தப்படாத ஆதாரம் மற்றும் இதயம் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சில ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

ஆற்றல் ஊக்கத்திற்கு ஆரஞ்சு விதைகள்

ஆரோக்கியத்தின் புதிய, இனிமையான அளவைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது,     ஆரஞ்சுகள் முதலில் நினைவுக்கு வரும். இருப்பினும், நாம் விரும்பும் ஆரஞ்சு நிறைந்த உணவின் ஒரு பகுதியாக விதைகள் இருக்காது. ஆனால் அந்த விதைகள் நம் உடலில் உள்ள ஆற்றல் மட்டத்தை துரிதப்படுத்தும்.

ஆரோக்கியமான பற்களுக்கு ஆப்பிரிக்க பேரிக்காய் விதைகள்

ஆப்பிரிக்க பேரிக்காய், அல்லது டாக்ரியோட்ஸ் எடுலிஸ், மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல்வேறு மருத்துவ, மருந்தியல் மற்றும் உயிரியல் பண்புகளைக் கொண்ட ஒரு பழமாகும். மறுபுறம், விதைகள் ஆரோக்கியமான பற்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு பங்களிக்கும் கால்சியம் உட்பட அதிக அளவு ஊட்டச்சத்துக்களால் ஏற்றப்படுகின்றன.

மன ஆரோக்கியத்திற்கான பாசிப்பயறு விதைகள்

பேஷன் ஃப்ரூட் என்பது ஊதா/தங்க மஞ்சள் நிறப் பழம். இது அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகிறது. ஆனால் விதைகள் நம் ஆரோக்கியத்திற்கு பழங்களைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். பேஷன் பழ விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முறையான மதிப்பாய்வின் படி, மக்கள் தங்கள் கவலை அளவை நிர்வகிக்க உதவும்.

(எச்சரிக்கை: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நீங்கள் சந்திக்கும் எந்த ஆபத்தையும் தடுக்க கீழே பட்டியலிடப்பட்டுள்ள விதைகளை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார பராமரிப்பு வழங்குனருடன் சரிபார்க்கவும்.)



--

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவாகும். ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது.

அது ராகு அல்லது பெட்கி போன்ற பெரிய மீன் வகையாக இருந்தாலும் சரி, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற சிறிய மீன் வகையாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு வகையான மீன்களும் அதன் தனித்துவமான சுவையில் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. மீன்களை வறுத்து சாப்பிட்டாலும், வேகவைத்து சாப்பிட்டாலும், குழப்பு வைத்து சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும். மீன் சமைக்க மிகவும் எளிதானது. ஏனெனில் அதன் சதை பகுதிகள் சீக்கிரத்தில் வேகும் தன்மை கொண்டது.

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.

மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது.

உடல் எடையை குறைக்கும் மீன் உணவுகள்

ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

மீன்களின் மருத்துவப் பயன்கள்

மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.

மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது.

பெண்கள் மீனை அதிக அளவில் சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.

மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்..

தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.

தூக்கம் வராமல் கஷ்டபடுவோர் உணவில் அதிக அளவு மீன் சேர்த்துக் கொண்டால் நல்லத் தூக்கம் வரும்.


--

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts