லேபிள்கள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கீரைக் குவியல்களின் மீது வியாபாரி அடிக்கடி நீர் தெளிப்பது ஏன்?

பிடுங்கப்பட்ட கீரைச் செடியில் இருந்து ஆவி ஈர்ப்பினால் நீர் இழக்கப்படும். நீர் இழக்கப்படுவதால் கீரை வாடும். வாடுவதால் அதில் இருந்து சில உயிர்சத்துக்கள் இழக்கப்படுவதை தடுக்க நீர் தெளிக்கப்படும். நீர் தெளிக்கப்படும்போது, சூழல் வெப்பநிலை குறையும்.

பூட்டின் கீழே இருக்கும் ஒரு சிறிய ஓட்டை எதற்கு தெரியுமா..?

மழைப் பெய்யும்போது பூட்டிற்குள் தண்ணீர் புகுந்தால் அந்த தண்ணீர் இந்த ஓட்டை வழியாக தான் வெளியே வரும். பின்னர் நீங்கள் பூட்டு சரியாக வேலை செய்ய எண்ணெய் விட வேண்டுமென்றால் இந்த சிறிய ஓட்டையைப் பயன்படுத்தலாம்.

சயனைடு விஷம் சாப்பிட்டால் ஏன் உடனே மரணம் நேரிடுகிறது?

விஷம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது பாம்புகள் தான். அதில் நாகப்பாம்பு, ராஜ நாகம் போன்றவை நமது மனதில் வந்து உதிக்கும் முதன்மை பெயர்கள். பாம்பு, தேள் போன்றவற்றில் விஷம் இருக்கிறது. இவை கடித்தாலோ, கொத்தினாலோ இறந்துவிடுவோம் என்ற அச்சம் நம் மத்தியில் இருக்கிறது.

ஆனால், உலகில் இவற்றை விட மிகவும் கொடிய, அபாயகரமான விஷத்தன்மை கொண்ட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், ரசாயனங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றில் பெரும்பாலானவை நுகர்ந்து பார்த்தாலோ, சருமத்தில் ஊடுருவினாலோ கூட மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டுள்ளன.

சயனைடு என்பது ஒரு வர்ணமற்ற கேஸ் ஆகும். எந்த வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சயனைடு மிகவும் கொடிய விஷமாகவே காணப்படுகிறது. இது கசப்பான பாதாமை போன்ற வாசம் கொண்டதாகும். சயனைடு வாசத்தை நீங்கள் நுகர்ந்தால் தலைவலி வரும், குமட்டல் வரும், இதய துடிப்பு குறையும், மூச்சு திணறல் ஏற்படும். இது அனைத்தும் ஓரிரு நிமிடத்தில் ஏற்படும். இது உடலில் இருக்கும் ஆக்சிஜன் செல்களை இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும்.



--

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts