லேபிள்கள்

சனி, 9 மே, 2026

எளிதாகக்கிடைக்கும் ரோஜாப்பூவில் உள்ள நன்மைகள்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காயவைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4, 5 பூலாங் கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரைமணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணிநேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.

உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும்.

பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும்.

ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும்.

வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.



--

புதன், 6 மே, 2026

குளியலறை மற்றும்உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவைக் கண்டு பிடிப்பது எப்படி?

ரகசிய கெமரா மூலம் பெண்களை படம்பிடிக்கும் சம்பவங்கள் உலகளவில் அதிகரித்துள்ளன. அந்த பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டும் பகீர் சம்பவங்களியும் அவ்வப்போது நடப்பதை கேள்விப் படுகிறோம்.

முக்கியமாக ஹொட்டல் அறைகள், துணிக்கடைகளில் ஆடைகள் மாற்றும் அறை, பொதுகழிப்பறை, குளியலைறை ஷவர், அறையின் கூரை பகுதி, கதவு துளைகள் போன்ற இடங்களில் ரகசிய கெமரா வைக்கப்படுகிறது.

இது போன்ற இடங்களில் ரகசிய கெமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?

இருட்டாக்கவும்

ரகசிய கெமராவில் பச்சை அல்லது சிவப்பு LED விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் தொடர்ந்து ஒளிரும். அவற்றைக் கண்காணிக்க, சந்தேகம் இருக்கும் அறையை முற்றிலும் இருட்டாக மாற்ற வேண்டும். இப்போது அங்கு ரகசிய கெமரா இருந்தால் அது இருட்டில் ஒளிரும்.

செல்போன்

செல்போனில் இருந்து ரேடியோ அலைவரிசைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. கெமரா பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில், ஏதேனும் ஒரு எண்ணை டயல் செய்யவும். அங்கு கெமரா இருந்தால், ரேடியோ அலைவரிசை காரணமாக அழைப்பில் சிக்கல் ஏற்படும்.

செயலிகள்

ரகசிய கெமராவை கண்டறிய ப்ளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.



--

ஞாயிறு, 3 மே, 2026

ஆர்கானிக் அறிவது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

'எங்க வீட்டுல எல்லாமே ஆர்கானிக்தான்' என்று சொல்வது இப்போதைய ட்ரெண்டாகி விட்டது.

காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து படுக்கப்போகும் போது ஏற்றும் கொசுவத்தி வரை சகலமும் ஆர்கானிக்கில் வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் இந்த ஆர்கானிக் மோகத்தைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் விதவிதமான ஆர்கானிக் பொருட்களை சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றன. ரேப்பரில் விதவிதமான வகையில் எழுதப்பட்டிருக்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு என்ன அர்த்தம்?

எதுவெல்லாம் அசல் ஆர்கானிக். வாங்க பார்க்கலாம்!

100% ஆர்கானிக்

இப்படி அச்சிடப்பட்டிருந்தால் இவை முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றை நம்பி வாங்கலாம்.

ஆர்கானிக்

இவற்றில், 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில் (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் எய்டுகள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும். இதற்கென சர்வதேச தரச் சான்று நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் இதனை அங்கீகரித்து இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்

இவற்றில் 70 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஊறுகாய் என்றால் அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கக்கூடும் என்பதால் கவனம். இவை ஆர்கானிக்கால் தயாரானவையே தவிரவும் முழு ஆர்கானிக்காக இருக்க வேண்டியதில்லை.

ஆர்கானிக் இன்கிரிடெண்ட்ஸ்

இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருட்கள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடெண்ட்ஸ் உள்ளதென குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்டுகள். இதுவும் ஆர்கானிக்கால் தயாராவையே தவிரவும் முழுமையான ஆர்கானிக் பண்புடையவை அல்ல.

நேச்சுரல்

இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவைகளுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகார சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவைகள் போலியானவையாகவும் இருக்கக்கூடும். இன்று பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் முதல் அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள் வரை ஆர்கானிக் நேச்சுரல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வரன்முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஃபேர் டிரேடு

என்.ஜி.ஓ-க்கள் மூலமாகச் சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள் சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள்.

ஆர்கானிக் பை டிரஸ்ட்

சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் பெறுவது பெரிய அளவில் சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், 'ஆர்கானிக் பை டிரஸ்ட்' எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது ஒருவகை சுயசான்றிதழ் என்பதால் இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ

இந்தியாவில் கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறி குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை கேஜ் ஃப்ரீ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்

தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றில் இருந்து பெறப்படும் பால் பொருட்களில் கிராஸ் ஃபெட் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

நோ ஏடட் ஹார்மோன்ஸ்

ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் நோ ஏடட் ஹார்மோன்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் முறையாக இந்த சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.



--

புதன், 29 ஏப்ரல், 2026

திங்கள் சோம்பலை வெல்ல ஐந்து வழிகள்.

நன்றி குங்குமம் டாக்டர்

திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகி விடுகிறது.

சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'Monday Morning Blue' என்கிறார்கள்.

இதனை வெல்வது எப்படி?

1.நேரமே படுக்கைக்குச் செல்லுங்கள்

ஞாயிற்றுக் கிழமை நேரமே படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால், நல்ல உறக்கம் கிடைக்கும். உடலில் உற்சாகம் பிறக்கும். மனமும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

2. அதிக வேலைப் பளுவைத் தவிர்த்திடுங்கள்

திங்கள் கிழமைகள் மனச்சோர்வை அளிப்பவையாக இருந்தால், எல்லா வேலையையும் திங்களே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். திட்டமிட்டு வேலையை ஞாயிறு மதியம் செவ்வாய் காலை என முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.

3. உடற்பயிற்சி அவசியம்!

ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஜாகிங் போன்ற கார்டியோ பயிற்சிகள், யோகா போன்றவை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

4. பொழுதுபோக்கை வைத்திருங்கள்

உங்களுக்கு என ஏதேனும் ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை வைத்திருங்கள். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யும்.

5. பணியை நேசியுங்கள்

உங்கள் வேலையை நேசியுங்கள். உங்கள் பணியை அதன் இயல்பை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி என்பது நமது தேர்வுதான். அது நமக்கு இன்னொருவர் தருவதல்ல. மனதைக் கரைத்து பணியாற்றும்போது உங்களுக்கு சுமை தெரியாது. செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டடையுங்கள்.



--

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

தண்ணீருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து பருகலாம்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தண்ணீர் மட்டும் குடிப்பதே நல்லது.

மேலும் இந்தத் தண்ணீரோடு சில முக்கியப் பொருட்கள் கலந்து குடித்திட, விதவிதமான வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். ஒவ்வொரு வாட்டர் ஃபாஸ்டிங் ஏராளமான பலன்களைத் தரும். அவரவரின் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் 'வாட்டர் ஃபாஸ்டிங்' முறையை கடைபிடிப்பது, முதலிடம். வாட்டர் ஃபாஸ்டிங்கே ஒரு சிகிச்சை என இந்திய மருத்துவமுறைகள் கூறுகின்றன. மாதம் ஒருமுறை இந்த 7 வாட்டர் ஃபாஸ்டிங் வகைகளில் ஏதாவதொரு ஃபாஸ்டிங் இருப்பது நல்லது. என்னென்ன வாட்டர் ஃபாஸ்டிங் எனப் பார்க்கலாமா. மேலும், ஃபாஸ்டிங்காக இல்லாமல் தனது அன்றாட வாழ்வில் முடிந்த நாட்களில் நாம் குடிக்கும் தண்ணீர் பழக்கத்தில் இந்த மாற்றங்களைச் செய்துகொண்டும் பலன் பெறலாம்.

தண்ணீர்

தண்ணீர் உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், அதிக அளவிலோ குறைந்த அளவிலோ இல்லை. தேவையான அளவில் மட்டுமே. தேவையான அளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், தாகத்தின் தேவையைப் பொறுத்துத் தண்ணீர் பருகுவது சரியான அளவு. உடலுக்குத் தேவையான அளவும் இதுதான். தாகம் இல்லாமல் இருந்து, அந்நேரம் தண்ணீர் பருகுவது உடலுக்குத் தேவையற்றது. இதனால் சிறுநீரகங்கள் மற்றும் இதன் சார்ந்த உறுப்புகளுக்குக் கூடுதல் சுமையைத் தரும். தண்ணீரைத் தேவையானபோது மட்டும் தாராளமாகப் பருகினாலே பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம்; ஏற்கெனவே இருக்கும் நோய்களைக் குணமாக்கலாம். ஒரு நாள் முழுக்கத் தண்ணீர் மட்டுமே பருகி, வேற எதுவும் பருகாமல் பசிக்கும்போது நீர் மட்டுமே பருகி எடுக்கும் ஃபாஸ்டிங்தான் 'வாட்டர் ஃபாஸ்டிங்' முறை. உடலில் உள்ள 70% உடல் தொந்தரவுகளை நீக்கிவிடும். மாதம் ஒரு முறை வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். அதிகப் பசி, அலசர் இருப்பவர்களுக்கு இந்த ஃபாஸ்டிங்கை பின்பற்ற முடியாது. அவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

தேன் தண்ணீர்

தண்ணீரில் எந்தச் சுவை கலந்தாலும், அது உணவாகி விடுகிறது. தேன் தண்ணீர் என்பது உணவுதான். வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், அடிக்கடி பசி, உணவு எதுக்களித்தல், வாயு பிரச்சனை உள்ளவர்கள் தேன் தண்ணீரைப் பருகிட இந்தப் பாதிப்புகள் குறையும். தேன் தண்ணீரை பசிக்கும்போதெல்லாம் தேவையான அளவு தாராளமாகப் பருகி ஒரு நாள் முழுக்கத் தேன் தண்ணீர் சுவைத்து மட்டுமே விரதம் இருந்து வர உடலில் உள்ள கழிவுகள் கரைந்து வெளியேறும். குறிப்பாக வயிற்றுக் கழிவுகள் வெளியேறிட உதவும். இந்த ஃபாஸ்டிங்கை மாதம் ஒரு முறை எடுக்கலாம். அல்சர், அதிகப் பசி, வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஃபாஸ்டிங் முறை. பசி மிகவும் எடுத்தால் வெள்ளரிக்காய் மட்டும் கூடுதலாகச் சாப்பிட்டு இந்த ஃபாஸ்டிங்கை கடைப்பிடிக்கலாம்.

லைம் வாட்டர்

எலுமிச்சை பழச்சாறு என்பது முழுமையான உணவு. லைம் வாட்டரில் சிறு வேறுபாடுகள் உள்ளது. குடிக்கின்ற தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு மட்டும் சேர்த்துக் குடிப்பது 'லைம் வாட்டர்'. சர்க்கரை, உப்பு, தேன் சேர்க்கக் கூடாது. குடிக்கச் சற்று புளிப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நல்லது. அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும். வெயிட்லாஸ் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். ஒரு டம்ளரில் 10-15 எலுமிச்சை சாறு சொட்டுக்கள் விட்டுக் குடிப்பதும் நல்லது. தண்ணீருக்குப் பதிலாகத் தாகம் எடுக்கையில் காலை வேளையில் குடித்திட பலன் கிடைக்கும். அனைத்து டாக்ஸிக்களும் வெளியேறும்.

டிடாக்ஸ் வாட்டர்

தண்ணீரில் எலுமிச்சை பழத்தை ஸ்லைஸாக நறுக்கிப் போடவும். மேலும், அதில் இஞ்சி ஒரு இன்ச் அளவுக்கு லேசாகத் தட்டி போடவும். கூடுதலாக ஒரு பட்டை சேர்க்கவும். இதுவும் டிடாக்ஸ் வாட்டராக செயல்படுகிறது. நச்சு நீக்கும் ஃபாஸ்டிங்கின் ஒருமுறைதான். இதில் விதவிதமான டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்கலாம். வெள்ளரிக்காய், வாட்டர் மெலான், எலுமிச்சை, இஞ்சி, புதினா, பட்டை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என விதவிதமான காம்போக்களை பயன்படுத்தி டிடாக்ஸ் செய்யும் பழக்கங்களும் உண்டு.

பிங்க் வாட்டர்

கேரளாவில் பிரபலம். பதிமுகம் எனச் சொல்வார்கள். தண்ணீரில் சிறிது பதிமுகத்தைக் கலந்து குடிக்க, தண்ணீர் பிங்க் கலராக மாறும். இவற்றைக் குடித்திட உடல் குளிர்ச்சியாக்குகிறது என ஆயுர்வேதம் சொல்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. செரிமான மண்டலத்தைச் சீர்படுத்துகிறது. இந்தப் பதிமுகம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதற்கு 'கேரளா ரெட் வுட் வாட்டர்' என்ற இன்னொரு பெயரும் உண்டு. தண்ணீருக்குப் பதிலாகத் தண்ணீரில் பதிமுகத்தைக் கலந்து தண்ணீராகக் குடிக்கும் பழக்கம் கேரள மக்களுக்கு உண்டு. இங்கும் சில கேரள உணவகத்தில் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீரும் கேரளத்தில் மிக பிரபலம். இங்குத் தமிழ்நாட்டில் சிலர் சீரகத் தண்ணீர் குடிப்பதையே வழக்கமாக வைத்திருக



--

தண்ணீருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து பருகலாம்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தண்ணீர் மட்டும் குடிப்பதே நல்லது.

மேலும் இந்தத் தண்ணீரோடு சில முக்கியப் பொருட்கள் கலந்து குடித்திட, விதவிதமான வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். ஒவ்வொரு வாட்டர் ஃபாஸ்டிங் ஏராளமான பலன்களைத் தரும். அவரவரின் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் 'வாட்டர் ஃபாஸ்டிங்' முறையை கடைபிடிப்பது, முதலிடம். வாட்டர் ஃபாஸ்டிங்கே ஒரு சிகிச்சை என இந்திய மருத்துவமுறைகள் கூறுகின்றன. மாதம் ஒருமுறை இந்த 7 வாட்டர் ஃபாஸ்டிங் வகைகளில் ஏதாவதொரு ஃபாஸ்டிங் இருப்பது நல்லது. என்னென்ன வாட்டர் ஃபாஸ்டிங் எனப் பார்க்கலாமா. மேலும், ஃபாஸ்டிங்காக இல்லாமல் தனது அன்றாட வாழ்வில் முடிந்த நாட்களில் நாம் குடிக்கும் தண்ணீர் பழக்கத்தில் இந்த மாற்றங்களைச் செய்துகொண்டும் பலன் பெறலாம்.

தண்ணீர்

தண்ணீர் உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், அதிக அளவிலோ குறைந்த அளவிலோ இல்லை. தேவையான அளவில் மட்டுமே. தேவையான அளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், தாகத்தின் தேவையைப் பொறுத்துத் தண்ணீர் பருகுவது சரியான அளவு. உடலுக்குத் தேவையான அளவும் இதுதான். தாகம் இல்லாமல் இருந்து, அந்நேரம் தண்ணீர் பருகுவது உடலுக்குத் தேவையற்றது. இதனால் சிறுநீரகங்கள் மற்றும் இதன் சார்ந்த உறுப்புகளுக்குக் கூடுதல் சுமையைத் தரும். தண்ணீரைத் தேவையானபோது மட்டும் தாராளமாகப் பருகினாலே பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம்; ஏற்கெனவே இருக்கும் நோய்களைக் குணமாக்கலாம். ஒரு நாள் முழுக்கத் தண்ணீர் மட்டுமே பருகி, வேற எதுவும் பருகாமல் பசிக்கும்போது நீர் மட்டுமே பருகி எடுக்கும் ஃபாஸ்டிங்தான் 'வாட்டர் ஃபாஸ்டிங்' முறை. உடலில் உள்ள 70% உடல் தொந்தரவுகளை நீக்கிவிடும். மாதம் ஒரு முறை வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். அதிகப் பசி, அலசர் இருப்பவர்களுக்கு இந்த ஃபாஸ்டிங்கை பின்பற்ற முடியாது. அவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

தேன் தண்ணீர்

தண்ணீரில் எந்தச் சுவை கலந்தாலும், அது உணவாகி விடுகிறது. தேன் தண்ணீர் என்பது உணவுதான். வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், அடிக்கடி பசி, உணவு எதுக்களித்தல், வாயு பிரச்சனை உள்ளவர்கள் தேன் தண்ணீரைப் பருகிட இந்தப் பாதிப்புகள் குறையும். தேன் தண்ணீரை பசிக்கும்போதெல்லாம் தேவையான அளவு தாராளமாகப் பருகி ஒரு நாள் முழுக்கத் தேன் தண்ணீர் சுவைத்து மட்டுமே விரதம் இருந்து வர உடலில் உள்ள கழிவுகள் கரைந்து வெளியேறும். குறிப்பாக வயிற்றுக் கழிவுகள் வெளியேறிட உதவும். இந்த ஃபாஸ்டிங்கை மாதம் ஒரு முறை எடுக்கலாம். அல்சர், அதிகப் பசி, வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஃபாஸ்டிங் முறை. பசி மிகவும் எடுத்தால் வெள்ளரிக்காய் மட்டும் கூடுதலாகச் சாப்பிட்டு இந்த ஃபாஸ்டிங்கை கடைப்பிடிக்கலாம்.

லைம் வாட்டர்

எலுமிச்சை பழச்சாறு என்பது முழுமையான உணவு. லைம் வாட்டரில் சிறு வேறுபாடுகள் உள்ளது. குடிக்கின்ற தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு மட்டும் சேர்த்துக் குடிப்பது 'லைம் வாட்டர்'. சர்க்கரை, உப்பு, தேன் சேர்க்கக் கூடாது. குடிக்கச் சற்று புளிப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நல்லது. அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும். வெயிட்லாஸ் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். ஒரு டம்ளரில் 10-15 எலுமிச்சை சாறு சொட்டுக்கள் விட்டுக் குடிப்பதும் நல்லது. தண்ணீருக்குப் பதிலாகத் தாகம் எடுக்கையில் காலை வேளையில் குடித்திட பலன் கிடைக்கும். அனைத்து டாக்ஸிக்களும் வெளியேறும்.

டிடாக்ஸ் வாட்டர்

தண்ணீரில் எலுமிச்சை பழத்தை ஸ்லைஸாக நறுக்கிப் போடவும். மேலும், அதில் இஞ்சி ஒரு இன்ச் அளவுக்கு லேசாகத் தட்டி போடவும். கூடுதலாக ஒரு பட்டை சேர்க்கவும். இதுவும் டிடாக்ஸ் வாட்டராக செயல்படுகிறது. நச்சு நீக்கும் ஃபாஸ்டிங்கின் ஒருமுறைதான். இதில் விதவிதமான டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்கலாம். வெள்ளரிக்காய், வாட்டர் மெலான், எலுமிச்சை, இஞ்சி, புதினா, பட்டை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என விதவிதமான காம்போக்களை பயன்படுத்தி டிடாக்ஸ் செய்யும் பழக்கங்களும் உண்டு.

பிங்க் வாட்டர்

கேரளாவில் பிரபலம். பதிமுகம் எனச் சொல்வார்கள். தண்ணீரில் சிறிது பதிமுகத்தைக் கலந்து குடிக்க, தண்ணீர் பிங்க் கலராக மாறும். இவற்றைக் குடித்திட உடல் குளிர்ச்சியாக்குகிறது என ஆயுர்வேதம் சொல்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. செரிமான மண்டலத்தைச் சீர்படுத்துகிறது. இந்தப் பதிமுகம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதற்கு 'கேரளா ரெட் வுட் வாட்டர்' என்ற இன்னொரு பெயரும் உண்டு. தண்ணீருக்குப் பதிலாகத் தண்ணீரில் பதிமுகத்தைக் கலந்து தண்ணீராகக் குடிக்கும் பழக்கம் கேரள மக்களுக்கு உண்டு. இங்கும் சில கேரள உணவகத்தில் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீரும் கேரளத்தில் மிக பிரபலம். இங்குத் தமிழ்நாட்டில் சிலர் சீரகத் தண்ணீர் குடிப்பதையே வழக்கமாக வைத்திருக


--

வியாழன், 23 ஏப்ரல், 2026

Fwd: ஹெல்மெட் வாங்கப் போறீங்களா? நீங்கள் கவனிக்க வேண்டியவை!

ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?

காவலரிடம் பைன் கட்ட வேண்டுமே என கடமைக்காக தினமும் ஹெல்மெட் அணிவோர் தான் அதிகம்..

ஆனால் உயிரை காக்க ஹெல்மெட் அணிவது மிக அவசியம்...

டூவீலர்களை ஓட்டும்போது தேவைப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணம் ஹெல்மெட்தான். ஹெல்மெட் அணிந்துகொண்டால் மட்டும் போதாது. அது, தலையில் சரியாக பொருந்தி உள்ளதா? என்பதை உறுதிசெய்வது மிக முக்கியம்.

அந்த வகையில் ஹெல்மெட்டின் வகைகள் என்ன? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.

ஹெல்மெட்.. எவ்வாறு தேர்வு செய்வது?

ஹெல்மெட்டின் விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். (குறிப்பாக தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள் நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக்கூடாது).

ஆண், பெண் ஆகிய இருவருக்குமே பொதுவாக முகத்தை முழுவதும் மூடும் ஹெல்மெட்தான் லாங் டிராவலுக்கு சிறந்தது. ஏனெனில் இதுதான் தலைக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது. பூச்சி அடிக்காமல் இருக்க அணியப்படும் பாதி ஹெல்மெட் சிறந்தது அல்ல.

ஹெல்மெட் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் 'ஐஎஸ்ஐ" முத்திரை இருக்கிறதா?... 'டாட்" மற்றும் 'இசிஇ" தரச்சான்றிதழ் பெற்றதா? என்பதை தான்... பைக் ரேஸர்களும் கூட இந்த தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்களையே பயன்படுத்துகின்றனர்.

ஹெல்மெட்டின் வகைகள் என்ன?

வகை, நிறம், கிராபிக்ஸ், டிசைன் மற்றும் பாதுகாப்பு அளவு என்பதற்கு ஏற்ப, பல்வேறு ஆப்ஷன்களுடன் ஹெல்மெட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆனாலும் புல் பேஸ் , ஓபன் பேஸ் மற்றும் மாடுலர்என ஹெல்மெட்களில் மூன்று முக்கியமான வகைகள்தான் உள்ளன.

புல் பேஸ் ஹெல்மெட்கள் ஒட்டுமொத்த தலையையும் கவர் செய்யும். மற்ற வகைகளுடன் ஒப்பிட்டால், இருப்பதிலேயே புல் பேஸ் ஹெல்மெட்கள்தான் மிகவும் பாதுகாப்பானவை.

ஓபன் பேஸ் ஹெல்மெட்கள் ரைடரின் தலையை மட்டுமே கவர் செய்யும். ரைடரின் முகத்திற்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்காது. ஆனால், ரைடர்களுக்கு சிறப்பான கூலிங்கை இது வழங்கும். இதர வகை ஹெல்மெட்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான பாதுகாப்பையே வழங்கும்.

மாடுலர் ஹெல்மெட்களில் உள்ள பிளிப் ஆப்ஷன் மூலம், இதனை புல் பேஸ் ஹெல்மெட்டாகவோ அல்லது ஓபன் பேஸ் ஹெல்மெட்டாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

'எப்போதும் தரமான ஹெல்மெட்களை அணிந்துகொண்டு, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதே சிறந்தது



--

எளிதாகக்கிடைக்கும் ரோஜாப்பூவில் உள்ள நன்மைகள்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காயவைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4, 5 பூலாங் கி...

Popular Posts