லேபிள்கள்

திங்கள், 9 ஜூன், 2025

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

ஆனால் இரத்த அழுத்த நோயாளிகள் சில உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இல்லையெனில் அவர்களின் இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதற்கு சரியான வழியும் உள்ளது. உண்மையில், மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக பிபியை அதிகரிக்கும் பயிற்சிகளைச் செய்வது, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஆபத்தானது. இந்த பயிற்சிகளில் எடை தூக்குதல், ஸ்பிரிண்டிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், ஸ்குவாஷ் போன்றவை அடங்கும்.

அதேபோல் இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தலைவலி, உடல் வலி, அதீத சோர்வு அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் மேற்கொண்டால் உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

- நடைபயிற்சி

- ஜாகிங்

- ஸ்கிப்பிங் செய்வது

- ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி

- டான்ஸ்

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்யும் போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

* மெதுவான வேகத்தில் உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.

* இரத்த அழுத்தம் அதிகரித்தால், படிப்படியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள்.

* உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

* அதிக டென்ஷன் எடுக்காதீர்கள் மற்றும் கனமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.

* தேவையானதை விட அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

6 விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்

* காபி: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபி மற்றும் சோடா போன்ற பானங்கள் தீங்கு விளைவிக்கும். நீங்களும் தேநீரைத் தவிர்த்தால் நல்லது.

* மசாலா: அதிக காரமான உணவுகள் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

* சர்க்கரை: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

* உப்பு: அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* ஊறுகாய்: எந்த உணவுப் பொருளையும் பாதுகாக்க உப்பு அவசியம். உணவு விரைவில் அழுகுவதை உப்பு தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உப்பு சேர்த்து பாதுகாக்கப்பட்ட பொருட்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

* பாக்கெட் உணவு: உயர் இரத்த அழுத்தம் நோயாளிகள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்டாக்கில் சோடியம் அதிகமாக உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சோடியம் நல்லது இல்லை.



--

வெள்ளி, 6 ஜூன், 2025

வெயில் நாளில் வெளியே சாப்பிடுவோருக்கு வரும் வயிற்று பிரச்சனைகளுக்கு சில வழிகள்.

வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்...

என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி' என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா... எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார். ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு

பொதுவாக நிறைய பேருக்கு இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்திருக்கும் போது வயிறு வீங்கியதாக ஒரு உணர்வு தோன்றும்.

இதற்கு முக்கிய காரணம் நம் குடல் மற்றும் வயிற்றில் வாயுக்கள் நிரம்பியதாலே இந்த பிரச்சினை உண்டாகிறது.

இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் வயிற்று வலி, வயிற்றில் போக்கு போன்றவற்றை அனுபவிக்க கூடும்.

இதனை ஒரு சில எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் ஒரு கைப்பிடி அளவு சாதத்தை சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி போன்ற பதத்துக்கு வந்ததும் எடுத்து குடிக்கலாம். வாய்வுப் பிடிப்பு ஏற்பட்டிருக்கிற சமயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த கஞ்சியைக் குடித்தால் போதும் வாய்வுப் பிடிப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் 2 பல் பூண்டு ஆகியவற்றை தட்டிச் சேர்த்து கொதிக்க விடுங்கள். இது ஒரு கப் அளவுக்கு சுண்டி வந்த பிறகு அதை ஆறவிட்டு வெதுவெதுப்பாக குடியுங்கள். அதேபோல இரவில் தூங்குவதற்கு முன்பாக, பாலில் பூண்டு பற்கள் 10 சேர்த்து நன்கு வேகவிட்டு குடித்து வந்தாலும் வாயுத்தொல்லை தீரும்.

ஓமத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை அப்படியே 5 நிமிடங்கள் மூடி வைத்து விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம். அல்லது ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து காலை வேளையில் டீயாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டம்ளர் புளிக்காத மோரில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் கால் ஸ்பூன் அளவு பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே குடித்து வரலாம். குறிப்பாக, வெயில் காலத்துக்கு வயிற்றுக்கு மட்டுமல்லாது, உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ஒரு கப் பூசணிக்காயை நறுக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் சீரகம் கால் ஸ்பூன் சேர்த்து, கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். நன்கு வெந்ததும் சாப்பிடவும்.

வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லையால் சிரமப்படுகிறவர்கள் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் என இரண்டு வேளை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் அளவுக்கு ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து குடித்து வர வேண்டும். இப்படி குடித்து வரும்போது நான்கு நாட்களில் வாயுத்தொல்லை நீங்கும். வயிறு வீக்கமும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதை அப்படியே கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.



--

செவ்வாய், 3 ஜூன், 2025

தலைவலியை போக்க எளிமையாக தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி.

தலைவலியை வந்துவிட்டாலே போதும் பலர் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதுண்டு. இருப்பினும் இதனை சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்க்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும்.

மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும். முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும்.


--

வியாழன், 29 மே, 2025

வாழை இலை குளியலால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

வாழை இலை குளியல் உடலுக்கு புத்துணர்ச்சியையும், புதுப் பொலிவையும் தரும். உடலில் உள்ளுறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் மகத்துவம் தரும் ஒரு இயற்கை மருத்துவம் ஆகும்.

வாழை இலை குளியல் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்கவேண்டும்.

பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும். மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும். இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும்.

அவ்வப்போது வாழை இலை குளியலில் ஈடுபட்டவரிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அவிழ்த்துவிட வேண்டும். தொந்தரவு இல்லை என்றால் குறித்த நேரம் வரை வைத்திருக்கலாம். சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும். இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். மேலும் இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம்.

வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம்.



--

திங்கள், 26 மே, 2025

வெயில் காலத்தில்என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

வெயிலுக்கே உண்டான சில பாதக அம்சங்கள் எப்போதும் இருக்கும்.

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்து தான் தீர வேண்டும்.

வெயில் காலங்களில் கண்டிப்பாக நாம் செய்யவே கூடாதவை என சிலவும், செய்தே தீர வேண்டியவை என சிலவும் உள்ளன. அதைப் பற்றி பார்ப்போமா?

செய்ய வேண்டியவை:

வெயில் காலங்களில் உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடும். அதனால் பெரும்பாலும் கடையில் வாங்கும் உணவு வகைகளை தவிர்த்து விட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உணவினால் உண்டாகக்கூடிய உடல் உபாதைகளை தவிர்க்கலாம்.

மேலும் அதிக நீர்ச்சத்துடைய பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் அருந்த மறக்காதீர்கள். எங்கே செல்வதாக இருந்தாலும் கையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

வெயில் காலமென்றால் ஒரு நாளில் இரண்டு வேளை குளிக்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது, சத்தான உணவை தேர்ந்தெடுத்து உண்பதற்கு சமம்.

வெயில் காலத்தில் கூடுமான வரை வெளிர் நிறங்களில் உள்ள தளர்வான காட்டன் மற்றும் லினன் ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

ஏனெனில், அடர் நிறங்கள் சூரியக் கதிர்களை அப்படியே உள்வாங்கி சூட்டைக் கிளப்பும். வெளிர் நிறங்களே சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் பிரதிபலிக்கும். எனவே வெயிலுக்கு வெளிர் நிறங்களே ஏற்றவை.

செய்யக்கூடாதவை:

வெயிலில் தாகமெடுக்கிறதே என்று, மறந்தும் அசுத்தமான குடிநீரை குடித்து விடாதீர்கள்.

அதேபோல சாலையோரங்களில் சுகாதாரமற்று சமைக்கப்படும் உணவுகளையும் வாங்கி சாப்பிடக்கூடாது.

மதிய வெயிலில் வெளியே செல்ல வேண்டியதாக இருந்தால் குடை பயன்படுத்துங்கள். வெயிலின் தாக்கம் அதிகமுள்ள மதிய நேரங்களில், நேரடியாக வெப்பம் உச்சந்தலையில் இறங்கும்படியாக வெளியே செல்லக்கூடாது.

இனிப்பான குளிர்பானங்கள் தாகத்தை அதிகரிக்கக்கூடியவை. எனவே அவற்றைத் தவிர்த்து விட்டு பதிலாக அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம்.

அதே போல சத்தான சாலட்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை ஓரம் கட்ட வேண்டும்.

வெயில் காலங்களில் ஃபுட் பாய்ஸனிங் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம், எனவே வீடுகளில் எஞ்சிய உணவுகளை, மறுநாள் உண்ணும் பழக்கத்தை விடுங்கள்.



--

வெள்ளி, 23 மே, 2025

டீ_யில்_பிஸ்கட் தொட்டுசாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து! இவ்வளவு பக்க விளைவுகளா..?

நம்மில் பலருக்கு டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

1) பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிடுபவராயின், அது உடல் பருமன் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

2) சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டை டீயில் தொட்டு நீண்ட காலமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.

3)பொதுவாக சர்க்கரை நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.

4) பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிட்டால், அது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து பலவீனமாக்கிவிடும்.

5) பிஸ்கட்டுகளானது சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இதில் நார்ச்சத்து சுத்தமாக இல்லை. ஆகவே பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

6) பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. தினமும் பிஸ்கட்டை சாப்பிட்டால், அது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். இதன் விளைவாக பற்களில் துவாரங்கள் உருவாகி, பல் சொத்தையை உண்டாக்கும்.



--

திங்கள், 19 மே, 2025

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.



--

வெள்ளி, 16 மே, 2025

மன அழுத்தம்நீக்கும் மருதாணி

மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது.

பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று.

மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர்.

மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை.

ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர்

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள்.

டாக்டர் எமர்சன் மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர்.

டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார்.

கை, கால் அரிப்பு

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

நகச்சுத்தி

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.

நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.

நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

மேக நோய்கள் நீங்க

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.

சுளுக்கு நீங்க

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

நல்ல தூக்கம் பெற

மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.

மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.



--

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால் இ...

Popular Posts