லேபிள்கள்

திங்கள், 3 நவம்பர், 2025

எப்போதும் ஏ சியில்இருப்பதால் ஏற்படும் தீமைகள்.

ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்து போய் விடும். எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற் போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும்.

இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும்

நீண்ட நேரம் ஏசியில் உட்கார்ந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற்றாலும், ஏ.சியில் தூங்குவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.. அது உங்கள் உடலில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீண்ட நேரம் ஏசியில் உட்காருவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

வறண்ட கண்கள்: ஏசியில் தங்குவது உங்கள் கண்களை வறட்சியாக்கும். எலக்ட்ரானிக் கேஜெட்களை நாம் அதிகமாகச் சார்ந்திருப்பதன் காரணமாக உலர் கண் நோய்க்குறி நாட்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இதனால் வறட்சி ஏற்படுகிறது. உங்களுக்கு ஏற்கனவே உலர் கண் நோய்க்குறி இருந்தால், நீண்ட நேரம் ஏசியில் இருப்பது அறிகுறிகளை மோசமாக்கும். ஒருவர் நீண்ட நேரம் ஏசியில் இருக்கக் கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்தல்: காற்றுச்சீரமைப்பிகள் நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். காற்றில் இருந்து ஈரப்பதத்தை அகற்றுவதால் தோல் மற்றும் முடி வறண்டு சேதமடைகிறது. ஈரப்பதம் இல்லாததால் முன்கூட்டிய முதுமை, தேவையற்ற தோல் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

நீரிழப்பு: ஏசி நீரிழப்புக்கும் வழிவகுக்கும். அறையில் இருந்து அதிக ஈரப்பதத்தை ஏசி உறிஞ்சுகிறது, இது நீரிழப்பு உணர்வை ஏற்படுத்தும்.

சுவாச பிரச்சனைகள்: அதிக நேரம் ஏசியில் இருப்பது சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும். இது மூக்கு, தொண்டை மற்றும் கண்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் வறண்ட தொண்டை, நாசியழற்சி மற்றும் நாசி அடைப்பை அனுபவிக்கலாம்.

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை: ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, ஏசி ஆஸ்துமா நிலைமையை மோசமாக்கும்.. உங்கள் ஏசி சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அது ஒவ்வாமையைத் தூண்டி ஆஸ்துமாவை மோசமாக்கும்.



--

புதன், 29 அக்டோபர், 2025

நகங்களில் எந்தெந்த அறிகுறி இருந்தால் என்ன நோய்க்கான அறிகுறி என்று தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம்.

 ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என அனைத்து மனநிலைக்கும் பலிகடா ஆவது நகங்கள்தான். அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி என்பது பற்றியெல்லாம் விளக்குகிறோம்

நகம், விரலுக்கு ஒரு கவசம் போன்றது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை.

* மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை.

நகங்களின் அமைப்பு, அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றைப் பார்த்து, உங்களுக்கு எந்த நோய் இருக்கலாம் என்று சொல்லலாம். ஆம்.. உங்கள் நகங்கள் காட்டும் அறிகுறிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க முடியும்

நகங்கள் உடைந்தால் : உங்கள் நகங்கள் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டிருந்தாலோ அல்லது தானாக உடைந்தாலோ, உங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதையும், சத்துக்கள் குறைவினால் வரும் காலங்களில் உங்களுக்கு நோய்கள் வரக்கூடும் என்பதையும் குறிக்கிறது. உங்களுக்கும் அத்தகைய நகங்கள் இருந்தால், உங்கள் உணவு பழக்கங்களையும் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும்.

நகங்கள் மெலிதல் : உங்கள் விரல்களில் உள்ள நகங்கள் நாளுக்கு நாள் மெலிந்து, இலகுவாகி, அவற்றின் நிறமும் மங்கிக் கொண்டே இருந்தால், உங்கள் உடலில் ரத்தப் பற்றாக்குறை இருக்கலாம் அல்லது கல்லீரல் தொடர்பான நோய்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். இது வயதுக்கு ஏற்ப நடந்தாலும், சிறு வயதிலேயே நடந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெள்ளை புள்ளிகள் : உங்கள் நகங்கள் படிப்படியாக வெள்ளை நிறத்தை நோக்கி நகர்ந்தால் அல்லது அவற்றில் வெள்ளை புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தால், உங்கள் உடலில் கால்சியம் பற்றாக்குறை உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் விரைவில் இதய பலவீனம் அல்லது கல்லீரல் தொடர்பான நோய்களால் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

மஞ்சள் நிற நகங்கள் : நகங்கள் மஞ்சள் நிறமாகி அவற்றின் தடிமன் அதிகரிப்பதால் உங்களுக்கு பூஞ்சை தொற்று இருக்கலாம் என்று அர்த்தம். இத்தகைய நகங்கள் தடிப்புத் தோல் அழற்சி, தைராய்டு மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் சாத்தியத்தை பரிந்துரைக்கின்றன. நகங்களின் மஞ்சள் நிறம் உங்கள் உடலில் இரத்தம் இல்லாததைக் குறிக்கிறது. இந்த நிலை உங்களுக்கு இரத்த சோகையை உண்டாக்கும். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியமான உணவை மேம்படுத்த வேண்டும்.

நீண்ட கோடுகள் : உங்கள் நகங்களில் நீண்ட, செங்குத்து கோடுகள் இருந்தால், சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றன. அத்தகைய நகங்கள் இருந்தால், சிறுநீரக கல் அல்லது யுடிஐ போன்ற நோய்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.. மேலும் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.


--

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

ஸ்கூல் பேக்கை சுமப்பதன்மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் முதுகு வலியைப் போக்கும் வழிகள்

முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கீழ் முதுகு வலி.

மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி 2-ம் இடத்தில் உள்ளது. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகு பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மை காரணங்களாக சொல்லலாம்.

சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பையில் கல் உள்ளவர்களுக்கு கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்கு கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்

சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.

முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது

இதனை அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.

முதுகு வலி தீர்க்க வழிகள்:

சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.

அமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.

எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.

விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.

தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.

முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வலியை குறைக்கவும் உதவும்.

உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.



--

வியாழன், 23 அக்டோபர், 2025

உங்கள் வீட்டில் கரண்ட் பில் கம்மியாக வருவதற்கு சில டிப்ஸ்களை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குளிர் காலத்தில்தான் அதிகமாக மின்சார பயன்பாடு உள்ளது . வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலங்களில் கீசர் போன்ற சாதனங்கள் நம் வீட்டில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கும். இதை தடுக்க சில விஷயங்களை நாம் ஃபாலோ செய்ய வேண்டும்.

முதலில் நாம் அறையில் இல்லாத போது பல்புகள் அணைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நாம் பயன்படுத்தும் பல்புகள் கூட மின்சார கட்டணத்தில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். எல்இடி பல்புகள் நமது வீட்டை வெளிச்சமாக வைத்திருக்கும். அதே நேரத்தில் மின்சார கட்டணத்தையும் சேமிக்க உதவும். மற்ற பல்புகளுடன் ஒப்பிடும்போது இது ஆயுட்காலம் அதிகம்.

தூசி, குப்பை, பூச்சிகளிடம் இருந்து உங்களை பாதுகாக்க வைத்திருக்க குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வராதவாரு கதவுகளை நன்றாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது என்ன முக்கியமான விஷயம் என்று கூட நீங்கள் நினைக்கலாம், ஆனால் இதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது கதவின் இடைவெளியில் மூலம் காற்று புகாதவாறு இருந்தால் உங்கள் வீடு எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருக்கும். இதனால் உங்கள் ஜன்னல்களும் நன்றாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் பயன்படுத்தும் செருகி இருக்கும் பிளக்குகளை எடுத்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது சுவிட்சுகள் அணைக்கப்பட்டிருந்தாலும் 50 சதவீதம் மின்சாரம் ஆனது இந்த சமயங்களில் பயன்படுத்தப்படலாம். குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க முடியாது என்பதால் தான் நாம் சூடான நீருக்காக கீசர் போன்ற சாதனங்களை பயன்படுத்துகிறோம். இந்த சாதனங்கள் அதிக சூடாகும் போது சூடான தண்ணீரை சமன்செய்ய குளிர்ந்த தண்ணீரையும் அதிகம் பயன்படுத்துகிறோம். இதனால் தண்ணீரின் அளவும் அதிகரித்து மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அளவான சூட்டில் நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது.



--

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

டீ பற்றிய சில தகவல்கள்.

காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர்.

தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் டஸ்ட் டீக்கும் முழு இலை தேநீருக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.

தேநீர் இரண்டு வகைகளில் வருகிறது: இலைகள் மற்றும் தேநீர் பைகள்.

பெரும்பாலான மக்கள் பாரம்பரிய இலைகள் கலந்த தேநீரை விரும்புகிறார்கள், சிலர் தேநீர் பைகளை விரும்புகிறார்கள். ஒரு கோப்பை சிறந்த தேநீரை எவ்வாறு தயாரிப்பது என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கண்ணோட்டம் இருக்கலாம்.

டஸ்ட் டீ: இது தேயிலையின் மிகக் குறைந்த தரம் ஆகும். இது உடைந்த இலைகளை நசுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகிறது. இது சிறிய தேயிலை துகள்களை மட்டுமே விட்டுச்செல்கிறது. அதன் சுவை பொதுவாக திரும்பத் திரும்பக் குடுக்கும்போது நீடிக்காது.

முழு இலை தேநீர்: 'முழு இலை தேநீர்' என்பது, அப்படியே, சேதமடையாத இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரைக் குறிக்கிறது. டஸ்ட் டீ என்றும் அழைக்கப்படும் தேயிலை பைகள், விரைவாக காய்ச்சுவதற்கு வடிவமைக்கப்பட்ட சிறிய தேயிலை இலைகள். ஒரு முழு இலையும் பெரிய பரப்பளவைக் கொண்டிருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் தேநீர் சுவையாகவும், செழுமையாகவும் இருக்கும்.

பொதுவாக, டஸ்ட் டீயை விட முழு இலைத் தேநீரில் சுவை அதிகம். முழு இலை தேநீர், இலை தேநீர்களை விட மிகவும் நுட்பமானதாக இருக்கும். தேநீர் பைகளில் இருந்து தேநீர் குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், நீங்கள் தேநீர் விரும்பினால், தளர்வான இலை தேநீர் சிறந்தது.

இறுதியில், அது உங்கள் தேவைகளை மட்டுமே சார்ந்துள்ளது. பொதுவாக, விரைவாக தேநீர் தயாரிக்க விரும்பினால் டஸ்ட் டீயே சிறந்த வழி. அதே சமயத்தில் ஆரோக்கிய நன்மைகள், சுவை, பணத்திற்கான மதிப்பு மற்றும் தரம் அனைத்தையும் நீங்கள் விரும்பினால் முழு இலை தேநீர் எப்போதும் சிறந்த தேர்வாகும்.



--

வியாழன், 16 அக்டோபர், 2025

மொபைல் சார்ஜர் நிறத்தின் சீக்ரெட்!

மொபைல் சார்ஜர் வெள்ளை நிறம் அல்லது கருப்பு நிறமாக தான் பெரும்பாலும் இருக்கும். மொபைல் கம்பெனி நினைத்தால் சார்ஜரை வேறு நிறத்தில் வடிவமைக்க முடியும்.

ஆனால் வெள்ளை நிறத்தில் வடிவமைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை ஈர்க்காது. மேலும் பெரும்பாலான வீடுகளில் வெள்ளை நிற ஸ்விட்ச் போர்டு தான் இருக்கும். அதற்கு பொருத்தமாக வெள்ளை நிற சார்ஜர் தயாரிப்பது வழக்கம்.

குறிப்பாக வெள்ளை நிறத்தை விட கருப்பு நிற சார்ஜர் தயாரிப்பதற்கு செலவு குறைவு தான். ஆனால் கருப்பு நிற சார்ஜர் மிகுந்த வெப்பத்தை ஈர்க்கும். குறிப்பாக கருப்பு நிற சார்ஜரில் சிவப்பு நிறத்தில் reflecting light கொடுத்திருப்பார்கள். இது இருட்டில் சார்ஜர் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான்.



--

திங்கள், 13 அக்டோபர், 2025

குறைவாகசாப்பிட்டாலும் உடல் எடை குறையவில்லையே என்று கவலைப் படுபவர்களுக்கு சில டிப்ஸ்.

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் காண முடிகிறது.

இதனால் பல்வேறு டயட் முறைகளை பின்பற்றி எடை இழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பது எளிதல்ல. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். டயட் இருக்கும் போது தவறான உணவுகளை உட்கொள்வதால் பசி எடுக்கும், இதனால் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், பசி கட்டுக்குள் இருக்கும். இது எடை இழப்பை எளிதாக்கும்.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், உடல் எடையை இழந்தவர்களும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க எண்ணுபவர்களும் தினமும் சில வழிகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் தான் உடல் சரியான அளவில் அப்படியே இருக்கும். மேலும் உடல் எடையை குறைப்பது எவ்வளவு முக்கியமானதோ அதை விட முக்கியமானது மீண்டும் உடல் எடை ஏறிவிடாமல் பார்த்துக்கொள்வது. அதனால் உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம்.

1) தினசரி 7000 முதல் 8000 ஸ்டெப்ஸ் நீங்கள் நடக்க வேண்டும், அவ்வாறு தினமும் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உங்கள் உடலில் அழகிய வடிவத்தை பெறும்.

2) உடற்பயிற்சி செய்வதை தினமும் சுழற்சி முறையில் செய்துவர வேண்டும், கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

3) மேலும் முறையான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தினமும் உணவில் 80% ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், 20% உங்களுக்கு தேவைப்படும் ஜங்க் ஃபுட்ஸ்களை உண்ணலாம், இருப்பினும் கூடுமானவரை ஆரோக்கியமான உணவுகளையே உண்ணுங்கள்.



--

வியாழன், 9 அக்டோபர், 2025

இரத்த அழுத்தம்திடீரென அதிகரித்தால் என்ன செய்வது?

உங்கள் இரத்த அழுத்தம் திடீரென உயர்ந்தால், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த சூழ்நிலையில் பீதி அடைவது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், பெரிய பிரச்சனை ஏற்படாதவாறு புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும். இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' சிறந்த டிப்ஸ் கொடுத்திருக்கிறார். அதை பின்பற்றினால் பிபி கட்டுக்குள் இருக்கும். எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.

1. இடது நாசி வழியாக சுவாசிக்கவும்

நிகில் வாட்ஸ் கூறுகையில், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது,   உடனடியாக இடது நாசி வழியாக மூச்சு எடுக்க வேண்டும். இந்தப் பயிற்சியை குறைந்தது 5-7 நிமிடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் போது 8 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து 10 வினாடிகள் சுவாசிக்கவும். நீங்கள் அதை பின்பற்றினால், முடிவை நீங்களே பார்க்கலாம்.

2. பொட்டாசியம் உணவுகளை உணவில் சேர்க்கவும்

இதனுடன், பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும். இது உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கும். அதேபோல் அவகேடோ, கீரை சூப், அன்னாசிப்பழம் சாப்பிடலாம். இது உங்களுக்கு நிம்மதியைத் தரும்.

இந்த டிப்ஸ்கள் மூலம் பிபியும் கட்டுப்படுத்தப்படும்

* இது தவிர, உணவு மற்றும் பானங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்யாத இத்தகையோர் தினமும் நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வகையான சிக்கலைத் தவிர்க்க, நீங்கள் இதை முயற்சிக்க வேண்டும்.

* புகைபிடிப்பவர்கள், இந்த பழக்கத்தை படிப்படியாக கைவிட வேண்டும், ஏனெனில் இது உயர் இரத்த அழுத்த பிரச்சினையை கூடுதலாக ஏற்படுத்துகிறது. மேலும், மதுவும் பிபிக்கு நல்லதல்ல. இந்த இரண்டு விஷயங்களிலிருந்தும் நீங்கள் விலகி இருப்பது நன்மை தரும்.

இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள்

* சுவாசப் பிரச்சனை

* பலவீனம்

* தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்

* நீர்ச்சத்தின்மை.



--

திங்கள், 6 அக்டோபர், 2025

துணிகளில் படிந்தகறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது.

அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ.

கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்:

ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். எண்ணெய் இருபுறமும் அழுந்தாமல் துடைத்து எடுக்கவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கறைகளை எடுக்கலாம். இதை துணிகளை மிஷின் உள்ளே போடுவதற்கு முன்பு உபயோகிக்கவேண்டும். பேக்கிங் சோடாவை கரை படிந்த துணிகளில் தடவி 24 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். ஒரு நாள் முழுக்க கரை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும். பின்பு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும். கறை நீங்கி துணி பளபளக்கும்.

சாக் பீஸ்:

துணிகளில் முதலில் எண்ணெய் கறையை துணியால் துடைத்து எடுத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் வெள்ளை சாக்பீஸ் எடுத்துக்கொண்டு கறையில் சில வினாடிகள் தேய்த்தால் கறைகள் மறையும். இதற்கு பதிலாக பதிலாக சுண்ணாம்பு இருந்தால் பயன்படுத்தலாம். பின்னர் சோப்பு போட்டு துணியை துவைக்கவும்.

பேபி பவுடர்:

கறை இருந்த இடத்தை துடைத்து விட்டு விட்டு அதில், பேபி பவுடர் எடுத்து கறையின் மீது சில நிமிடங்கள் போட்டால் அதன்மீது ஒட்டிக்கொள்ளும். பின்னர் சிறிது நேரம் கழித்து கைகளால் உருட்டி அழுக்குகளோடு பவுடர் வெளியே வரும். இதுவரை இல்லாத அளவுக்கு துணி பளிச்சிடும்.

டூத் பேஸ்ட்:

டூத் பேஸ்ட் ஆடையில் உள்ள கறைகளை நீக்க உதவும். முதலில் துணியில் கறை படிந்த இடத்தில் தடவி விடவும். பிறகு வெந்நீரை மெதுவாக துணி மீதுள்ள டூத் பேஸ்ட் மீது ஊற்றவும். உயரமாக கரை மீது படும்படி சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை கரைந்து வெளிவரும்.

வினிகர்:

வினிகரை வைத்து கறையை வெளியேற்றிவிடலாம். சம அளவு தண்ணீர் எடுத்து அதனுடன் வினிகரை கலந்து தடவினால் துணியில் கறை நீங்கி விடும்.



--

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஏசி போட்டாலும்உங்க ரூம் சீக்கிரமா கூல் ஆகலயா..? இந்த டிப்ஸை ஃபாலோபண்ணுங்க…

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது..

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.. இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்ச்சியாக இருக்க, கண்டிப்பாக ஏசி என்பது அன்றாட தேவையாகிவிட்டது.. வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், ஏசியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணங்கள் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன, இது நிச்சயமாக பெரும்பாலான மக்களுக்கு ஒரு கவலைக்குரிய காரணியாகும்.

பெரும்பாலான ஏசிகள் சிறந்த வெப்பநிலை அமைப்பு மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, இதன் விளைவாக மின் கட்டணங்கள் உயரும்.

உங்கள் ஏசி வேகமாக வேலை செய்ய உங்கள் அறையை மூடி வைக்க வேண்டும். எனவே, ஏசியை ஆன் செய்யும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஏதேனும் கதவு திறந்திருந்தால், உங்கள் ஏசி, குளிரூட்டலுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுக்கும்..

ஏசி வேகமாக குளிர்விக்க, நீங்கள் வழக்கமான இடைவெளியில் பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, உங்கள் ஏசி குளிர்ச்சியடையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனடியாக ஏசி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் ஏசி அதிக மின்சாரத்தை உட்கொள்ளும்.

ஏசி மற்றும் சீலிங் ஃபேன் ஒன்றாகப் பயன்படுத்தினால் அறையை மிக வேகமாக குளிர்விக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் மின்விசிறியை இயக்குவது, அறை முழுவதும் அனல் காற்றை வீசுவதை இது ஏசியின் குளிர்ந்த காற்றை எதிர்க்கும். எனவே, சிறிது நேரம் ஏசியைப் பயன்படுத்திய பின் அறை குளிர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மின்விசிறியை இயக்கலாம், ஆனால் குறைந்த வேகத்தில். இது அறை முழுவதும் குளிர்ந்த காற்றைப் பரப்ப உதவும்.

உங்கள் ஏசி வேகமாக குளிர்ச்சியடைய, குளியலறை அல்லது சமையலறையில் ஏதேனும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அவற்றை அணைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அறையின் வெப்ப அளவைக் குறைத்து ஏசியை சிறப்பாகச் செயல்படச் செய்யும்.



--

எப்போதும் ஏ சியில்இருப்பதால் ஏற்படும் தீமைகள்.

ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விட...

Popular Posts