லேபிள்கள்

புதன், 19 பிப்ரவரி, 2025

மண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

பல வித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள மண் பாண்டங்கள் உதவி புரிகிறது. இந்த மண் பாண்டங்கள் கோடை காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலங்களுக்கும் ஏற்றது.

மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.

மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள் நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில் அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள் மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண் பாண்டங்களே சிறந்தவை.



--

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

பட்டுப் புடவையைஅலசுவது எப்படி?

பெண்களின் ஆசைக்கான பட்டியலில் முதன்மையான இடம், புடவைகளுக்கு உண்டு. அதிலும், பட்டுப் புடவை என்றால் எப்போதும் ஸ்பெஷல் தான்.

பட்டுப் புடவையை ஆசைப்பட்டு வாங்கும் பெண்களுக்கு அதைப் பராமரிப்பதுதான் பெரிய வேலை. பட்டுப் புடவைகளை துவைக்கக் கூடாது என்றும், வெளியில்தான் டிரை வாஷ் கொடுத்து வாங்க வேண்டும் என்றும் பலரும் நினைத்திருப்பர். வீட்டிலேயே எளிய முறையில் பட்டுப் புடவையை வாஷ் செய்வதற்கான வழிகள் இங்கே...

தேவையான பொருள்கள்:

- வாளி

- குளிர்ந்த நீர்

- வாஷிங் லிக்விட்

1. பட்டுப் புடவைகளை அலசுவதற்குக் வெந்நீரோ, சாதாரண தண்ணீரோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. குளிர்ந்த நிலையில் உள்ள தண்ணீர்தான் பயன்படுத்த வேண்டும்.

2. அரை வாளி குளிர்ந்த நீரில், மைல்டான வாஷிங் லிக்விட்டை தேவையான அளவு சேர்த்துக் கலக்கவும். உடனே இதில் பட்டுப் புடவையை ஊறவைக்கக் கூடாது. முன்னதாக, ஒரு சிறிய பஞ்சை அந்த வாளி நீரில் விட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து, அதில் நிறம் ஏதேனும் மாறியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை செக் செய்துகொண்டு, பின்னர் பட்டுப்புடவையை வாளியில் ஊறவைக்க வேண்டும்.

3. பட்டுப்புடவையை ஊறவைக்கும் முன், புடவை முழுக்க விசிறி மடிப்பாக மடித்து, பார்டரை மொத்தமாகச் சேர்த்து நூல்/கயிற்றால் முடிச்சிட்டுக் கட்டிவிடவும். அதேபோல, முந்தானைப் பகுதியையும் விசிறி மடிப்பாக மடித்து, கட்டிவிடவும். இப்போது, பார்டர், முந்தானை தவிர, புடவையின் உடல் பகுதியை மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும். இப்படி செய்வதன் மூலம் பார்டர், முந்தானையில் உள்ள சாயம் புடவையில் பட்டுப் பாழாகாமல் தவிர்க்கலாம்.

4. புடவையின் உடல் பாகம் முழுக்கத் தண்ணீரில் மூழ்கும் வகையில் பிரித்து, விரித்துவிடலாம். ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்க வேண்டாம்.

5. பின், மற்றொரு வாளியில் குளிர்ந்த தண்ணீர் கொண்டு, அதில் புடவையை மென்மையாக அலசி எடுக்கவும். அலசும்போது கறைகள் ஏதேனும் இருந்தால், பிரஷ் இல்லாமல் கைகளால் தேய்க்கவும். கவனத்தில் கொள்க... அலசிய பின் பிழியவோ, கசக்கவோ கூடாது.

6. அலசி முடித்த பின்னர் தண்ணீரை வடியவிட்டு, நிச்சயமாக நிழலில்தான் உலர்த்த வேண்டும். வெயிலில் நேரடியாகக் காயவைத்தால் நூல் பாதிக்கப்பட, நிறம் மாற வாய்ப்புள்ளது. முடிந்தால் டவல் டிரை செய்த பின் உலர்த்தலாம்.



--

வியாழன், 13 பிப்ரவரி, 2025

புரோட்டீன் பவுடர்என்றால் என்ன? இதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.


புரதம்: நம் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. நம் உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் உற்பத்தியாக, குணமடைய, செல்கள் வளர, புதுப்பித்துக்கொள்ள புரதம் அவசியம்.

தேவையான அளவு புரதம் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பு, எடை குறைப்பு மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

இறைச்சி, முட்டை, பால், மீன், சோயா என பல்வேறு உணவுகளில் இயற்கையாகவே புரதச்சத்து உள்ளது.

புரோட்டீன் பவுடர்:

விலங்கு அல்லது தாவர வகைகளில் இருந்து புரத சத்தை மட்டும் பிரித்து எடுப்பது தான் இந்த புரோட்டின் பவுடர்.

மொத்தம் 9 வகையான புரோட்டின் பவுடர் உள்ளன:

1. முட்டை புரோட்டீன் (Egg Protein)

2. வே புரோட்டீன் (Whey Protein)

3. பட்டாணி புரோட்டீன் (Pea Protein )

4. பிரவுன் அரிசி புரோட்டீன் (Brown Rice Protein)

5. சணல் விதைகள் புரோட்டீன் (Hemp Protein )

6. தாவர புரோட்டீன் (Plant Protein )

7. சோயா புரோட்டீன் (Soy Protein)

8. பாதாம் புரோட்டீன் (Almond Protein)

9. கேசீன் புரோட்டீன் (casein Protein)

விலங்கு வகையில் 2 வகையான பாலால் ஆன புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது:

வே புரோட்டீன் மற்றும் கேசின் புரோட்டீன்.

தாவர வகையின் பிரிவுகள்

- அரிசி, பட்டாணி, சோயா, பாதாம், சணல் விதை போன்றவற்றிலிருந்தும் புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு ஸ்கூப்பில் 20-30 கிராம் புரோட்டீன் இருக்கும். அவரவர் தேவைக்கு ஏற்றார் போல (பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் பரிந்துரைக்கும் புரோட்டீன் அளவு) ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளலாம்.

யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

1. உணவு மூலம் சரியான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

3. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலும் உடற்பயிற்சி செய்து தசைகளின் வளர்ச்சி ஆதரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் புரோட்டீன் பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

DRI (Dietary Reference Intake) அளவுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, 75 கிலோ எடையுள்ள நபர் - 75 கிலோ * 0.8கிராம்= 60 கிராம் புரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை, நீங்கள் மசில் பிள்டிங் செய்பவராக இருந்தால், தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்க புரோட்டீன் அளவு ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1.4-2.0 கிராம் வரை மாறுபடும்.


--

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

உங்கள் உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் முகமே உதவி செய்யும். மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதே போல, அகத்தின் ஆரோக்கியமும் முகத்தில் தெரியும். உங்கள் முகம் உங்கள் உடல்நலத்தை பற்றி கூறுவதென்ன?

என்பது குறித்து இங்கு காண்போம். உங்கள் உடலில், நீங்கள் நாளொன்றுக்கு பல முறை பார்ப்பது, பராமரிப்பது உங்கள் முகம் தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒருவரைப் பற்றிய முழு விவரங்களையும் முகத்தின் வழியே அறிந்து கொள்வது வழக்கம். முகத்தைப் பார்த்தே ஒருவரை பற்றி கூறிவிடலாம் என்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கின்றது. ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது மனம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் முகமும் மிகவும் சோர்வுற்றதாக தோன்றுகிறது. இதற்கு நேர்மாறாக, மகிழ்ச்சியான காலங்களில், திருப்தியாக இருக்கும் சமயத்தில் முகம் ஒளிரும். எனவே உங்கள் உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் முகம் உதவி செய்யும், அதற்காக மருத்துவர் பகிர்ந்த சில காரணிகளை பார்க்கலாம்.

மஞ்சள் நிறத்தில் முகம் மற்றும் கண்கள்:

முகமும், கண்களும் மஞ்சள் நிறத்தில் இருப்பது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். உங்கள் உடலில் ஏராளமான கழிவு பொருட்கள் சேர்க்கையும், சிவப்பு ரத்த அணுக்கள் சிதைவதாலும் முகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகத் தெரிகின்றன. மஞ்சள் காமாலை நோயால், வைரஸ் தொற்று (ஹெபடைடிஸ், மோனோநியூக்ளியோசிஸ்), கல்லீரல், பித்தப்பை, அல்லது கணையக் கோளாறுகள் அல்லது லிவர் சிரோசிஸ் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

முகத்தில் உள்ள முடி உதிர்தல்:

அலோபேஷியா என்பது அதிகப்படியான முடி உதிர்வைக் குறிப்பதாகும். பொதுவாக பெண்களிடையே ஏற்படும் அதிகப்படியான கூந்தல் உதிர்வைக் குறிக்கும் இந்த கோளாறு, கூந்தல் அல்லது தலைமுடி என்பதைத் தாண்டி, புருவம், கண்ணிமைகள் மற்றும் தாடி என்றும் பாதிக்கிறது. புருவ அடர்த்தி குறைதல், கண்ணிமைகள் அடிக்கடி உதிர்வது அல்லது திட்டு திட்டுகாக தாடி அல்லது மீசையில் முடி உதிர்தல் போன்றவை அலோபேஷியா அரேட்டா (alopecia areata) பாதிப்பை சுட்டிக் காட்டுகிறது.

இதற்கான காரணம், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு. இது உங்கள் முடிக் கற்றைகளை பாதிக்கிறது. எனவே, முகத்தில் இருக்கும் இமை, புருவம், தாடி போன்ற இடங்களில் அதிகப்படியான முடி உதிர்வு காணப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் டானிக்குகள் ஆகியவற்றை உட்கொள்வது, இழந்த முடிகள் மீண்டும் முளைக்க உதவும். வீக்கமான கண்கள் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லை என்றாலே கண்களில் அதன் பாதிப்புத் தெரியும். இதற்கான காரணம், கண்களுக்குக் கீழே திரவம் தேங்குவது தான். இது கண்கள் வீங்கிய தோற்றத்தைக் கொடுக்கும்.

கண்கள் வீக்கம் என்பதற்கான சில காரணங்கள்:

தூக்கமின்மை, அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உண்ணுதல், ஹார்மோன் மாற்றங்கள், வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை, முதுமை - உங்கள் கண் இமைகளை ஆதரிக்கும் தசைகள் வயதாகும் போது தளர்வடையும், ஒவ்வாமை, மேக்கப், சோப்பு அல்லது கிளென்சர் பயன்படுத்துவது, வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது.

முகத்தில் முறையற்ற முடி வளர்ச்சி:

தேவையில்லாத இடங்களில் முடி வளர்வதும், தேவையான இடங்களில் வளராமல் இருப்பதும், எரிச்சலூட்டுவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத விதமாக, ஆண்களுக்கு காதுகளைச் சுற்றியும், பெண்களுக்கு புருவங்கள் அல்லது கன்னத்தைப் சுற்றியும் காணப்படலாம். இது தீவிரமானது அல்ல. அதே போல, அப்படியே விட்டுவிடவும் முடியாது. முகத்தில் முறையற்ற முடி வளர்ச்சி, தோற்றத்தை பாதித்தாலும், பெண்களில் இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உடல்நலக் குறைப்பாடு இருப்பதற்கான அறிகுறியாகும்.

வறண்ட மற்றும் இரத்தம் கசியும் உதடுகள்:

செதில் செதிலாக காணப்படும் வறட்சியான அல்லது உலர்ந்த உதடுகள் குளிர்காலத்தில் அதிகமாக காணப்படுகின்றன. பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், லிப் க்ரீம்கள் உங்கள் உதடுகளை பாதுகாக்கவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு, ஒவ்வாமை அல்லது ஸ்டெராய்டுகள் போன்ற மருந்தின் எதிர்வினை போன்ற சில உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இது காணப் படுகிறது.



--

திங்கள், 3 பிப்ரவரி, 2025

சிறுநீரகத்தைப் பாதிக்கும் ஐந்து ஆபத்தான பழக்கங்கள்.

சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

சில நேரங்களில் தவறான உணவு, மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சு கூறுகள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கின்றன என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதிலிருந்து, சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.

நோயின் தீவிரம் அதிகரித்தால் சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு குறிப்பாக உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

1. மது

அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி தெரிவித்துள்ளார். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும்,. உங்கள் மூளையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2. காபி

காபியில் அதிக அளவு காஃபின் உள்ளது. ஒரு ஆராய்ச்சியில், அதிக காஃபின் நிறைந்த பொருட்களை உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோயில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல காபி அதிகம் குடிப்பவர்களுக்கு சிறுநீரகத்தில் கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3. உப்பு

உப்பில் சோடியம் உள்ளது, பொட்டாசியத்துடன் சேர்ந்து, உடலில் சரியான அளவு திரவத்தை பராமரிக்கிறது, ஆனால் உப்பை உணவில் அதிக அளவில் சேர்த்தால், இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களுக்கு தீங்கு செய்யலாம்.

4. சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் அதிக அளவு புரதம் உள்ளது, புரதம் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் அதன் வளர்சிதை மாற்ற செயல்முறை மிகவும் கடினம். இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இறைச்சியில் உள்ள புரதம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

5. செயற்கை இனிப்பு

சந்தையில் கிடைக்கும் இனிப்புகள், குக்கீகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் செயற்கை இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இதை சாப்பிடவே கூடாது.



--

சனி, 1 பிப்ரவரி, 2025

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை.

அதிகாலையில் நாம் உட்கொள்ளும் நாளின் முதல் உணவு, அதாவது காலை சிற்றுண்டி நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமாகும்.

காலை எழுந்தவுடன் அதிக நேரம் வெறும் வயிற்றுடன் இருந்தால் பல பிரச்சனைகள் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள்.

காலை வேளையில் வயிறு காலியாக இருந்தால், பல வகையான நோய்கள் நம்மைத் தாக்க துவங்கிவிடுகின்றன. காலையில் வெறும் வயிற்றில் இருப்பதால், பலருக்கு அசிடிட்டி, வயிற்று வலி, வாந்தி மற்றும் ரத்தத்தில் சீரற்ற சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பலர் தங்கள் பசியைத் தணிக்க காலையில் தேவையற்ற பல உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகையால், வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாதவை எவை என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

வெறும் வயிற்றில் மது அருந்த வேண்டாம்

காலையில் வெறும் வயிற்றில் மது அருந்தினால், உடல்நிலை மோசமடையக்கூடும். வெறும் வயிற்றில் மது அருந்தினால், மது உடலின் இரத்த ஓட்டத்தில் செல்கிறது என்று நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மது உடல் முழுவதும் பரவி, அதன் காரணமாக, இரத்த நாளங்கள் விரிகின்றன. இதன் காரணமாக நமது நாடித் துடிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சனைகள் வரலாம். எனவே வெறும் வயிற்றில் மது அருந்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

வெறும் வயிற்றில் காபி வேண்டாம்

காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பெரும்பாலானோர் காபி குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடித்தால், அசிடிட்டி பிரச்சனை வரலாம்.

வெறும் வயிற்றில் சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

பெரும்பாலான மக்கள் வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லுவார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், உடனடியாக சூயிங்கம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லுவதால், செரிமான அமிலம் நம் வயிற்றில் உருவாகத் தொடங்குகிறது. இந்த செரிமான அமிலங்கள் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை முதல் அல்சர் வரை பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லாமல் இருப்பது நல்லது.

வினோதம் ஆனால் உண்மை!!

வெறும் வயிற்றில் ஷாப்பிங்க் செய்தால் ஆபத்து!! ஆம், வெறும் வயிற்றில் ஷாப்பிங் செய்யக்கூடாது. ஊடக அறிக்கைகளின்படி, வெறும் வயிற்றில் இருப்பது நம்மை அதிக பொருட்களை வாங்க வைக்கிறது. எனவே வெறும் வயிற்றில் ஷாப்பிங் செல்ல வேண்டாம். இது உங்கள் மணி பர்சுக்கும் ஏற்றதாக இருக்காது.



--

புதன், 29 ஜனவரி, 2025

கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைக்கும்.

பெரும்பாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு தலைப்பு உடற்பயிற்சி. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா? சிக்கலற்ற கர்ப்பம் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி நல்லது என்றும், சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சங்கடமாகவும் அழுத்தமாகவும் உணர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:-

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம்

செய்யக்கூடியவை:

கர்ப்பம் உடலிலும் மனதிலும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது இங்கே:

முதல் மூன்று மாதங்கள் (1-2 வாரங்கள்):

நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி

தரையில் இருந்து எழுவதற்கு முன் உங்கள் பக்கமாக திரும்பி எழவும்

முதல் மூன்று மாதங்களில் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நரம்புகளைத் தணிக்க நல்லது

2வது மூன்று மாதங்கள் (13-26 வாரங்கள்):

*இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் காற்றில் தூக்க வேண்டிய பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

*நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி

*மெதுவாக ஓடுவதும் செய்யப்படலாம் ஆனால் உங்கள் மூட்டுகளில் அழுத்தம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

*பட்டாம்பூச்சி பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் செய்யலாம்.

3 வது மூன்று மாதங்கள் (27-40 வாரங்கள்):

*அனைத்து முக்கிய பயிற்சிகளையும் தவிர்க்கவும்.

*கடைசி மூன்று மாதங்களின் முடிவில்,

கூடுதல் எடையை சுமக்க உதவும் தசைகளை வலுப்படுத்தும் வலிமை பயிற்சி பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.

*நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய தசைகள் குளுட்டுகள், தொடை, வயிறு மேல் மற்றும் கீழ், பின் தசைகள்.

*உடற்பயிற்சி செய்யும் போது உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள் மற்றும் தளர்வான ஆடைகளை அணியுங்கள்.

*உடற்பயிற்சியை தவிர, ஆரோக்கியமான சமச்சீர் உணவும் உங்கள் உடற்தகுதிக்கு சேர்க்கிறது.

செய்யக்கூடாதவை:

*உங்கள் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்கவும்.

*உடற்பயிற்சியின் போது உங்களால் பேச முடியவில்லை என்றால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள்.

*ஆரம்ப சோர்வை நீங்கள் கண்டால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள்.

*உங்களுக்கு தலைசுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்பட்டால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

*கர்ப்பத்தின் 4 மாதங்களுக்குப் பிறகு உங்கள் முதுகில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.

*ஏனெனில் கருப்பை மற்றும் குழந்தைக்கு இரத்த விநியோகம் பாதிக்கப்படலாம்.

*எப்பொழுதும் ஒரு பயிற்றுவிப்பாளரிடமிருந்து பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றைத் தனியாகச் செய்யுங்கள்.

எச்சரிக்கை: இவை ஒரு குறிப்பு மட்டுமே என்றாலும், நிச்சயமாகத் தெரிந்துகொள்ள உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.



--

மண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

பல வித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள மண் பாண்டங்கள் உதவி புரிகிறது. இந்த மண் பாண்டங்கள் கோடை காலத்திற்கு மட்டுமல்ல எல்லா ...

Popular Posts