லேபிள்கள்

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.


காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி, சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத் தான் வாழும்.

ஆனால் புலி தனிமையில் வாழும். அதாவது புலிகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மற்றொரு புலியுடன் சேர்ந்து இருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாக புலிகள் காட்டின் உட்பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால் சிங்கக் கூட்டங்களை காட்டுப்பகுதி, சமவெளிப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் பார்க்க முடியும். ஒரு புலியின் சராசரி எடை 325 கிலோவாகும். ஒரு சிங்கத்தின் சராசரி எடை 225 கிலோ ஆகும். இந்நிலையில் புலியை விட சிங்கங்கள் எடை குறைவாக இருப்பினும் சிங்கங்கள் தான் மிகவும் வேகமாக செயல்படும். உதாரணமாக ஒரு புலி மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் சிங்கங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதனையடுத்து புலிகள் எப்போதும் தன்னுடைய உணவை தனியாக நின்று வேட்டையாடும். ஆனால் சிங்கங்கள் தன்னுடையை கூட்டமாகத்தான் வேட்டையாடும்.

அதன்பிறகு சிங்கங்கள் எப்போதும் தனக்கு பசிக்க கூடிய நேரத்தில் மட்டுமே வேட்டையாடும். ஆனால் புலி தன்னுடைய இறையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வேறு ஏதாவது விலங்கு வந்தால் உடனே அந்த விலங்கை வேட்டையாட ஆரம்பித்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் சிங்கத்தை விட புலிகள் கொடூரமானவை மற்றும் சக்தி வாய்ந்தவை ஆகும். பண்டைய ரோம் நாட்டில் சிங்கம் மற்றும் புலியை சண்டை போட வைத்துள்ளனர். அந்த சண்டையில் புலியே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் சிங்கமும், புலியும் வெவ்வேறு காலநிலையில் வசிப்பதால் அவைகள் சண்டையிட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அதை மீறியும் ஒருவேளை சிங்கமும், புலியும் சண்டை போட்டால் புலி தான் வெற்றி பெறும். இருப்பினும் சண்டை சிங்கங்கள் வசிக்கும் இடத்தில் நடைபெற்றால் சிங்கமும் தன்னுடைய மானம் காப்பதற்காக கடுமையாக போராடி வெற்றி பெறுவதற்கான‌ வாய்ப்புகளும் இருக்கிறது.



--

சனி, 13 செப்டம்பர், 2025

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் கண்பார்வைக்கு மிகவும் பிரச்சனையாகிவிடும். ஒரு விஷயத்தை பார்த்து ரசிப்பதற்கு நமக்கு கண்கள் மிகவும் முக்கியம். அப்படி கண்கள் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கண் தெரியாதவர்கள், கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் என அனைவரும் கருப்பு கண்ணாடியை ஏன் அணிகிறார்கள்? அது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா?

கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத் தான் காண முடியாது. ஆனால், ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களைச் சுலபமாக பாதிக்கும். கண் தெரியாதவர்களின் கண்கள் சூரிய வெளிச்சம் அல்லது லைட் வெளிச்சத்தில் மிகவும் உணர்வு திறன் குறைவாக இருக்கும். அவர்கள் கண்ணாடி போடாமல் சாதாரணமாக வெளியில் செல்லும் போது சூரிய வெளிச்சம் அவர்களின் கண்களில் படும். இதனால் கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும். விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்குத் தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். நாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கண் தெரியாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார்கள். இதை போட்டால் அவர்கள் வெளியில் செல்லும் போதும் அவர்களுக்கு சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படாது.



--

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க அசத்தலான வழிகள்.

ஒருவரது வயிற்றில்    புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான்.

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை, கெட்டுப் போன உணவை உண்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அசுத்தமான நீரைக் குடிப்பது போன்றவற்றால் வயிற்றில் புழு க்கள் உருவாகின்றன.

இதனால் அடிக்கடி வயிற்றில் திடீர் வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

எனவே இவற்றை எளிய முறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட, 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து உட்கொண்டு வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

கேரட்டை தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை மலத்தின் வழியாக எளிதில் வெளியேற்ற உதவும்.

பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.

ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

பூண்டை அரைத்து, அதில் கல் உப்பு சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பால் கூட குடிக்கலாம். இவ்வாறு செய்தால், குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களின் வயிற்றில் உள்ள புழுக்களும் அழிந்துவிடும்.

தினமும் துளசியை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு வேளை துளசி இலைகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளையின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு நாளைக்கு 2 வேளை நீரில் கலந்து குடித்து வர, சில நாட்களில் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வருவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம் இல்லாவிட்டால் பாகற்காயின் விதைகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிடலாம்.

ஒரு கப் சுடுநீரில் 1-2 கிராம்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், புழு பிரச்சனை இல்லாமல் வாழலாம்.



--

சனி, 6 செப்டம்பர், 2025

வாட்டி எடுக்கும் முதுகு வலியைப் போக்கும் வழிகள்.

நாம் முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்க்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே (back pain home remedies) செய்து பார்க்கலாம், அவ்வாறு செய்தும் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுப்பது அவசியம்.

உங்கள் முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.

முதுகு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் செய்து அருந்தலாம், இதனால் முதுகு வலி குணமாகும். அதேபோல் தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி பின் பருகிவரலாம். இதனால் முதுகு வலி நீங்கும்

1. உட்காரும் விதம்

அலுவகத்திலோ வீட்டில் டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உட்காரும் போது நேராகவும், குனியாமல் நிமிர்ந்து அமர்ந்தாலும், வேலை பளுவால் நீங்கள் சற்று சாய்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இந்த சூழ்நிலைகளில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றி கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்துங்கள்.

3. வைட்டமின்கள்

கால்ஷியம் எலும்பின் வலிமைக்கு முக்கியமானதாகும். உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல் நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகளை உடல் ஏற்று கொள்ளாது. இது தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாகும்.

4. உணவு முறை

நாம் சாப்பிடும் உணவுகளில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

5. தாதுக்கள்

எலும்பின் வளர்ச்சி மற்றும் வலிமையை மேம்படுத்த கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

6. சூடான குளியல்

முதுகு வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் சூடான குளியல் மேற்கொள்வது நல்லது. இது முதுவலியை கட்டுபடுத்துவதோடு உடலுக்கு உற்சாகத்தையும் வழங்கும்.

முதுகு வலி நீங்க

7. கடுகு எண்ணெய்

எலும்புகளை வலுவாக்க கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடக்க வேண்டும். கடுகு எண்ணெய் எலும்பின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.



--

புதன், 3 செப்டம்பர், 2025

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தினால் கிடைக்கும் நன்மைகள்.

உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது.

மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்

நாம் காலையில் எழும்போது டீ அல்லது காபி மட்டுமே குடிக்கிறோம். அதிலும் பெட் காபி குடிப்போர் பலர். ஆனால் டீ மற்றும் காபிக்கு பதிலாக வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகளில் முதலாவதாக நமது குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள நச்சு கழிவுகள் முற்றிலும் வெளியேறி விடும்.

தண்ணீர் குடிப்பதின் நன்மைகள்

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.

மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் இதனால் உடலானது சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். மேலும் அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.

தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. ஏனெனில் குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் மேலும் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது தனது அழகை இழந்து விடும். தண்ணீரை குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.



--

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

கோடை காலத்தில்கருப்பு நிற ஆடைகளை ஏன் அணியக் கூடாது?

கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள்...!!

கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்கும் ஏற்றது... சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் ஆடைகள் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

அந்த வகையில் கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள் என்னென்ன? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க...!!

கருப்பு நிற ஆடைகளை ஏன் அணியக்கூடாது?

கோடைக்கு ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகளை அணியலாம்.

பருத்தி ஆடையை அணியுங்கள்:

கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.

கோடையில் சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்து விதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.

காதி ஆடைகள்:

வெயில் காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிக சிறந்த உடை காதி உடைகள் தான். இந்த காதி ஆடையை சேலையாகவும், சுடிதாராகவும் மற்றும் பாவாடையாகவும் அணியலாம். மேலும், இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்.

இதையெல்லாம் அணியாதீர்கள்:

உடலை ஒட்டிய ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேண்ட்களை கோடை காலத்தில் அணியக்கூடாது. இவை பெண்களுக்கு உகந்த ஆடைகள் கிடையாது.

கோடை காலத்தில் இதமான ஆடை என்றால் அது பருத்தி சேலை தான். இதை தான் நமது முன்னோர்களும் பயன்படுத்தி உள்ளனர். முடிந்த வரை பருத்தி பாவாடைகளை அணிவதே சிறந்தது.



--

சனி, 23 ஆகஸ்ட், 2025

உங்கள் வீட்டில்எறும்புத் தொல்லையா? எப்படி விரட்டலாம் என்று பார்ப்போம்.

பொதுவாக நம்முடைய சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சிறிது சாதம் கொட்டினாலோ அல்லது இனிப்பு பண்டங்கள் சிதறினாலோ எறும்புகள் எங்கிருந்து தான் வருமோ தெரியாது கொஞ்ச நேரத்தில் படையெடுக்க ஆரம்பித்து விடும்.

இந்த எறும்பு தொல்லை பிரச்சினையானது எல்லோருடைய வீட்டிலும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதனை சரி செய்ய கடைகளில் பல வகையான மருந்துகள் கிடைக்கிறது. இருப்பினும் நம்முடைய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எறும்பை எப்படி விரட்டலாம் என்று குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சில நேரங்களில் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கும் பொழுது எறும்பு கொடியை பயன்படுத்த முடியாது. எனவே அந்த மாதிரியான சமயங்களில் இயற்கை முறையில் எறும்பை விரட்டலாம். இனிப்பு பொருட்கள் சிதறி தரையில் சிதறிக் கிடந்தாலும் அல்லது குழந்தைகள் பிஸ்கட் சிந்தினாலும் எறும்பு தொல்லைகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுமானவரை அதை உடனே சுத்தம் செய்து கொள்வது நல்லது. மேலும் சமையலறையில் வைத்திருக்கும் குப்பையையும் உடனே அப்புறப்படுத்தி விடுவது நல்லது. செல்லப்பிராணிகள் வைத்திருந்தால் அதன் உணவு பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.

எறும்பு எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை வைத்து அதில் ஊற்றலாம். இந்த சூட்டில் எறும்புகள் அழிந்துவிடும். இருப்பினும் எறும்பு குழிகள் மிகவும் ஆழமானவை என்பதால் எல்லா எறும்புகளும் ஒட்டுமொத்தமாக அழியாது. ஆனால் எறும்புகள் மறுபடியும் அந்த பொந்தில் இருந்து வருவது தடுக்கப்படும். கண்ணாடி கிளின்சர் மற்றும் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தப்படும் லிக்யூட் சோப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொண்டு எறும்பு வரும் இடத்தில் தெளிக்கலாம். சோப்பின் மனத்திற்கு எறும்புகள் தாங்காது ஓடிவிடும்.

எறும்புகள் போன பின் அந்த இடத்தை சுத்தமாக துடைத்து விடலாம். 50% ஒயிட் வினிகர் எடுத்து அதை ஸ்பிரே பாட்டிலில் எடுத்து அதனுடன் 50% தண்ணீரும் சேர்த்து எறும்பு வரும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் ஓடிவிடும். ஏனெனில் வினிகரில் உள்ள அமிலத்தன்மை எறும்புகளுக்கு பிடிக்காது. அதேபோன்று எறும்புகளுக்கு மிளகுத்தூள் வாசனையானது எரிச்சல் ஊட்டக் கூடியது, எனவே எறும்பு வரும் இடங்களில் மிளகுத்தூளை தூவி வைக்கலாம் . மிளகின் காரம் எறும்பு தொல்லையை விரட்டி விடும். பின்னர் எறும்பு அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்காது.



--

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

வாழைப்பழம் அதிகமாகசாப்பிட்டால் என்னவாகும்?

வீட்டில் உள்ள பழக்கூடையில் வாழைப்பழம் வைத்திருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பழங்கள் என்று கூறினால் முதலில் வாழைப் பழத்தின் பெயர் தான் நினைவுக்கு வரும்.

வாழைப்பழம் அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையானது மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சிலர் வாழைப்பழத்தை ஷேக் செய்து குடிக்கவும் விரும்புகிறார்கள். அதேபோல் ஜிம்மிற்கு செல்பவர்களும் வாழைப்பழ ஷேக்கை அடிக்கடி குடிப்பார்கள். வாழைப்பழத்தை அதிகமாக உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை கேட்கும் போது உங்களுக்கு விசித்திரமாக இருந்தால் இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களைப் பார்த்தால், வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.

வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கிய தீமைகள்

1. நீங்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வாழைப்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும். உண்மையில், வாழைப்பழத்தில் டைரமைன் என்ற பொருள் உள்ளது, இது ஒற்றைத் தலைவலியின் வலியை மேலும் அதிகரிக்கும். சிலருக்கு வாழைப்பழம் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால், இரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் ஏற்படலாம், இதன் காரணமாக ஹைபர்கேமியா பிரச்சனை ஏற்படலாம், சில சமயங்களில் இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும். வாழைப்பழத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை உட்கொள்வதால் பல் பிரச்சனைகளும் ஏற்படும்.

3. வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடாது. வாழைப்பழத்தில் அதிக அளவு கலோரிகள் உள்ளன, இது உங்கள் எடையை அதிகரிக்கும். நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

4. வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரையின் அளவும் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழங்களை அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், இது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



--

சனி, 16 ஆகஸ்ட், 2025

அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்.

நாம் அனைவரும் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது நும்முடைய உடலுக்கு சில தீமைகளும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டை முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும். முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும். ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.

ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

இருப்பினும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதிக முட்டைகளை உட்கொள்வது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

முட்டையில் கொழுப்பு உள்ளது. நீங்கள் அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது,     உங்கள் உடலால் உட்கொள்ளும் கலோரிகளை சமநிலைப்படுத்த முடியாது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.



--

புதன், 13 ஆகஸ்ட், 2025

உணவுக்கு முன்பு அல்லது பின்பு எப்போது ஸ்வீட் சாப்பிட வேண்டும்?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும் போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும்.

உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் வழக்கம் கூட உண்டு. ஆனால், இது தவறானது.

பெரும்பாலான ரெஸ்ட்ராண்ட்களில் கூட உணவின் இறுதியில் ஸ்வீட் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், இது தரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம்.

அதே சமயம், உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. இது நம் உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். ஆயுர்வேத நிபுணர், மருத்துவர் நிதிகா கோலி, இதுகுறித்த ஆலோசனைகளை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு, "பின்வரும் ஆலோசனைகள் என்பது பண்டைய கால ஆயுர்வேத பலன்களை உள்வாங்கிக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஸ்வீட்கள் மூலமாக உடல் நலன், ஆற்றல் போன்றவற்றை அதிகரிக்க முடியும்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

உணவுக்கு முன்பாக ஸ்வீட்கள் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக இனிப்புகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகவே, இனிப்புகளை முதலில் எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்திற்கு தேவையான என்ஜைம்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவே உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்தை அது மட்டுப்படுத்துகிறது.

உணவுக்கு முன்னால் இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது நம் நாவில் உள்ள சுவை மண்டலத்தை அது தூண்டிவிடும். உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் உணவு செரிமானம் ஆகாமல், ஆசிட் சுரப்பு அதிகமாவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல் உணவுக்குப் பின்னர் இனிப்புகளை எடுத்துக் கொண்டால் வாயு உருவாகும் என்று ஆயுர்வேத நிபுணர் நிதிகா கோலி தெரிவித்துள்ளார்.

காலை உணவில் இனிப்பு முக்கியம்:

மற்ற வேளை உணவுகளைக் காட்டிலும் காலை வேளை உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக, நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால், தமிழர் பண்பாட்டில் பெரும்பாலும் காலை டிபன் உணவுக்கு முன்பாக கேசரி, அல்வா, போன்றவற்றை பரிமாறுகின்றனர். நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் லோ-கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.



--

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.

காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி , சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத் தான் வாழும். ஆனால் புலி தனிமையில் வாழும். அ...

Popular Posts