லேபிள்கள்

சனி, 13 டிசம்பர், 2025

பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு வரும் பிரச்சனைகள்

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயணங்களால் ஆனது

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

* பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது தேவைப்படுகின்றது.

* குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. மற்ற உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்ப்பார்கள்.

* சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும்.

* கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

* உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

* பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும்.

* சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

* சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.


--

செவ்வாய், 9 டிசம்பர், 2025

நீங்கள் வாங்கும்பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார்கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?

நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட் இருப்பதை பார்த்திருப்போம்.

எதற்காக இந்த பார்கோட்? நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

பார்கோட் என்பது Machine Readable Fermat-ல் இருக்கும். தற்காலத்தில் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் வியாபார துறையில் பார்கோட் முறையானது மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த பார்கோட் ஆங்கிலத்தில் UNIVERSEL PRODECT CODE என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள முதல் மூன்று எண்கள் அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான எண்களாகும். உதாரணமாக 890 என்று ஆரம்பித்தால் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம். அதுவே 888 என்றால் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலியாக இதனை அச்சடிக்க முடியாது என்பது நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

நாடுகள் மற்றும் BARCODE எண்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

00-13: USA & CANADA

20-29: IN-STONE FUNCTIONS

30-37: FRANCE

40-44: GERMANY

45: JAPAN(ALSO 49)

46: RUSSIAN FEDERATION

471: TAIWAN

474: ESTONIA

475: LATVIA

477: LITHUANIA

479: SRI LANKA

480: PHILIPPINES

482: UKRAINE

484: moldova

485: Armenia

486: Georgia

487 : Kazakhstan

489: Hong Kong

49: Japan

50: United Kingdom

520: Greece

528: Lebanon

529: Cyprus

531: mecedonia

535: Malta

539: Ireland

54: Belgium & Luxembourg

560: Portugal

569: Iceland

57: Denmark

590: Poland

594: Romania

599: Hungary

600 & 601: South Africa

609: Mauritius

611: Morocco

613: Algeria

619: Tunisia

622: Egypt

625: Jordan

626: Iran

64: Finland

690-692: China

70: Norway

729: Israel

73: Sweden

740: Guatemala

741: El Salvador

742: Honduras

743: Nicaragua

744: Costa rica

746: Dominican Republic

750: Mexico

759: Venezuela

76: Switzerland

770: Columbia

773: Uruguay

775: Peru

777: Bolivia

779: Argentina

780: Chile

784: Paraguay

785: Peru

786: Ecuador

789: Brazil

80 - 83: Italy

84: Spain

850: Cuba

858: Slovakia

859:Csech Republic

860: Yugoslavia

869: Turkey

87: Netherland

880: South Korea

885: Thailand

888: Singapore

890: India

893: Vietnam

899: Indonesia

90 & 91: Austria

93: Australia

94: New Zealand

955: Malaysia

977: International standard serial number for periodicals (ISSN)

978: International standard book numbering ISBN

979: International standard music number( ISMN)

980: refund receipt

981 & 982: common currency coupons

99: coupons

இதை வைத்து நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...!!



--

சனி, 6 டிசம்பர், 2025

ரூபாய் நோட்டுகளில்சாய்வான கோடுகள் எதற்காக என்று தெரியுமா?

பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும்.

ரூபாய் நோட்டை நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக கொண்டுவந்தால் பச்சைக்கலராக அது மாறினால் நல்ல நோட்டு என்று தெரிந்துவிடும்.

பிரிண்ட் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிக்கும் ரூபாய் தாளில் இந்த மாதிரியான நிறம் மாறாது. அதேபோல ரூபாய் நோட்டில் காலியாக இருக்கும் வெள்ளை கலர் இடத்தில் கொஞ்சம் தூக்கி வைத்து பார்த்தால் காந்தி தாத்தா படமும், 500 என்றும் எழுதியிருக்கும். இதைப் பார்த்த உடனே நல்ல நோட்டு என்பதை கண்டுபிடித்து விடலாம். கண் தெரியாதவர்கள் ரூபாய் நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பதற்கு பிரைலி சிஸ்டம் என்பதை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.

அது எப்படி என்றால், 2000 ரூபாய் தாளில் இருபுறங்களில் ஓரத்தில் சாய்வான ஏழு கோடுகள் போடப்பட்டிருக்கும், அதேபோன்று அசோகா சக்கரத்திற்கு மேலே ரூ.2000 ரூபாய் என்று செவ்வக வடிவத்தில் எழுதியிருக்கும். இதை தடவி பார்த்து பார்வை இழந்தவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதேபோல 500 ரூபாய் தாளில் ஐந்து கோடுகள் இரண்டு பக்கங்களில் போடப்பட்டிருக்கும். அசோகா சக்கரத்திற்கு மேல் வட்ட வடிவில் 500 என்று எழுதப்பட்டிருக்கும் அதை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள்.

200 ரூபாய் தாளில் இரண்டு கொடு இரண்டு முட்டை அதனை அடுத்து இரண்டு கோடு இரண்டு பக்கங்களிலும் போடப்பட்டிருக்கும். மேலும் அசோகா சக்கரத்திற்கு மேல் வட்ட வடிவில் 200 எழுதப்பட்டிருக்கும். 100 ரூபாய் நோட்டில் 4 கோடு போடப்பட்டிருக்கும். அசோகா சக்கரத்திற்கு மேல் முக்கோண வடிவத்தில் 100 போடப்பட்டிருக்கும்,. இதை வைத்து கண் தெரியாதவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 17 குறியீடுகள் இருக்கிறதாம்.



--

புதன், 3 டிசம்பர், 2025

அசுத்தமானஇடங்களைக் கடக்கும் போது எச்சிலைத் துப்பாமல் விழுங்குவது சரியானதா?

அசிங்கமான இடங்களைக் கடக்கும் போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும் போதும் எனக்கு உடனே எச்சில் துப்பத் தோன்றும்.

அந்த நேரத்தில் சுரக்கும் எச்சிலை அப்படி துப்புவது சரியானதா? அந்த எச்சிலை விழுங்கினால் கிருமிகள் உடலுக்குள் போய்விடுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

பொதுவாகவே எந்தப் பொது இடத்திலும் வெளியிடத்திலும் எச்சில் துப்புவது சரியானதில்லை. இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அசுத்தமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எச்சில் துப்பத் தோன்றும் உணர்வு என்பது யாரையோ பார்த்து நீங்கள் செய்ய ஆரம்பித்ததாகவோ, யாரோ உங்களுக்குச் சொல்லியதன் விளைவாகவோதான் இருக்கும்.

தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள இடங்களைக் கடக்கும்போது வேண்டுமானால் அந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலம் உங்களுக்குள் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் அசுத்தமான இடங்களுக்குச் செல்லும்போது அந்தச் சூழலின் காரணமாக உங்களுக்கு அலர்ஜியோ, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகளோ வர வாய்ப்புண்டு. ஆனால், அந்தக் காற்றை சுவாசிக்கும் போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்குவதால் உங்களுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை.

இது போன்ற இடங்களைக் கடக்கும்போது ஏற்படும் அருவருப்பு உணர்வைத் தவிர்க்க நீங்கள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தொற்று பயமும் இருக்காது. அசுத்தமான இடங்களைக் கடக்கும்போதே தொற்று வந்துவிடும் என நினைப்பதும் தேவையற்ற பயம்.

எச்சில்

தொடர்ந்து நீங்கள் இதுபோன்ற இடங்களைக் கடக்க வேண்டியிருந்தால் போகும்போது மாஸ்க் அணிவதும் போய்விட்டு வந்ததும் கை, கால்களைக் கழுவுவதும்தான் சரியான பழக்கம்.

உங்கள் விஷயத்தில் எச்சில் துப்புவது போன்ற வேறு பழக்கங்கள் இருப்பதாக உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம். வெறும் எச்சில் துப்பும் பழக்கம் மட்டும்தான் இருக்கிறது என்றால் நீங்களே மெள்ள மெள்ள இதை மாற்றிக் கொள்ளலாம்.



--

சனி, 29 நவம்பர், 2025

நடைப்பயிற்சிசெய்பவர்கள் செய்யும் சில தவறுகளால் அதன் பலன் கிடைக்காமல் போகிறது.

தினமும் அதிகாலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வது பல்வேறு வகைகளில் பலன் தரும். உடல் ஆற்றல் அதிகரிக்கும்: நடைப்பயிற்சி என்பது உடலை சீக்கிரம் சோர்வடையச் செய்யாத சிறந்த உடற்பயிற்சியாகும்.

மேலும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்யும். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால், நிலையான ஆற்றல் தேவைப்படும். எனவே செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். வீட்டிற்குள் 10 நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பது நடைப்பயிற்சி ஆகி விடாது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவில் அல்லது வீட்டிற்கு வெளியே தெருவில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடந்து செல்வதாகும். தூக்கம் வராமல் இருப்பவர்கள் ஒரு கப் காபி குடிப்பதை விட, படிக்கட்டுகளில் 10 நிமிடம் நடப்பது அதிக ஆற்றலைத் தரும் என்பது ஆய்வில் தெரியவந் துள்ளது.

நடைப்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நலச் சிக்கல்களைத் தடுக்கிறது, இது எலும்புகளை வலுப்படுத்துகிறது, தசை சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது.

எண்ணற்ற நன்மைகள் இருந்தபோதிலும், நடைபயிற்சி பலருக்கு விரும்பிய முடிவுகளைத் தருவதில்லை. ஏன்? நடக்கும்போது நமக்கே தெரியாத தவறுகளைச் செய்வதே இதற்கு காரணம் ஆகும். அத்தகைய செய்ய கூடாதவைகளைக், கீழே பார்க்கலாம்.

நடையின் வேகத்தை எது தடை செய்கிறது?

குழுவாக நடப்பது, நடக்கும்போது பாட்டு கேட்பது, மொபைல் ஃபோன் அப்ளிகேஷன்களில் உலாவுவது, யாரிடமாவது போனில் அல்லது நேரில் பேசுவது, வேகமாக நடக்காமல் இருப்பது, நடக்கும்போது அங்கும் இங்கும் பார்ப்பது போன்ற சில காரணங்கள் நம்மில் பலருக்கு இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்தால் நடைப்பயணத்தினால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

இது தவிர சரியான ஆடைகளை அணியாதது ஒரு தனிநபரின் நடை வேகத்தையும் பாதிக்கும். மிகவும் இறுக்கமான ஆடைகள் அல்லது மிகவும் தளர்வான ஆடைகளை அணிவது சரியாக நடக்க உதவாது. காலணிகள் நடைபயிற்சி வேகத்தை பெரிய அளவில் பாதிக்கலாம். சரியான காலணிகளை அணியாதது நடைப்பயிற்சியை மட்டும் பாதிக்காது, கால் எலும்புகள் மற்றும் தசைகளையும் பாதிக்கும்.

நீங்கள் படிகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணுகிறீர்களா?

நீங்கள் படிகளின் எண்ணிக்கையை வெறுமனே எண்ணினால், அது பலன் அளிக்காது. நடப்பது என்பது வெறும் படிகளை எண்ணுவது அல்ல. நடைப்பயணத்தின் ஆரோக்கிய நன்மைகள் நீங்கள் எத்தனை கலோரிகளை எரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது ஆகும். இது உங்கள் நடையின் வேகத்தைப் பொறுத்தது ஆகும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒருவர் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறார் என்பதுதான் நடையின் வேகம். உதாரணமாக, ஒரு கிலோமீட்டருக்கு 9 நிமிட நடைப்பயிற்சி, ஒரு கிலோமீட்டருக்கு 10 முதல் 14 நிமிட நடை வேகத்தை விட அதிக கலோரிகளை எரிக்கும்.

நடக்கும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

தலையைக் குனிந்து கொண்டு நடக்கக் கூடாது. உங்கள் தலையை நேராக வைத்து, உங்கள் கழுத்து, முதுகு மற்றும் தோள்களை நேரான தோரணையில் பராமரிக்க வேண்டும். இதனால் நீங்கள் சரியாக சுவாசிக்க முடியும். நடக்கும்போது உங்கள் கைகளை செயலில் வைத்திருங்கள். அவற்றை இறுக்கமாக வைத்திருக்காதீர்கள் அல்லது காட்டுத்தனமாக விடாதீர்கள். உங்கள் உடலின் அதே வேகத்தில் உங்கள் கைகளை அசைக்கவும்.

இவை போன்ற சிறு சிறு செயல்களைத் தவிர்த்தால் நாம் எதற்காக நடைபயிற்சி செய்கிறோமோ அந்த பலனை எளிதில் பெறலாம்.



--

புதன், 26 நவம்பர், 2025

நம் டிவியை பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டில் இருக்கும் டிவியை சுத்தம் செய்யும் போது நன்றாகப்  பார்த்து துடைக்க வேண்டும்.

நம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிகவும் அதிகப்படியான தூசிகள் படிவது டிவியில் மட்டும் தான். எனவே டிவியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் டிவியை சுத்தம் செய்யும்போது சில தவறுகளை செய்கின்றனர். பொதுவாக எல்லோரும் ஈரமான துணியை கொண்டு டிவியை துடைப்பது வழக்கமாக உள்ளது . ஆனால் ஈரமான துணியை கொண்டு துடைக்கும் போது தூசிகள் அப்படியே தொலைக்காட்சி பெட்டியில் படிந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே டிவியில் கோடுகள் விழவும் வாய்ப்பிருக்கும். இதனால் உங்கள் டிவி புதிது போல் ஜொலிப்பதற்கு சில டிப்ஸ்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

வீட்டில் உள்ள கண்ணாடி பொருட்களை துடைக்க எப்பொழுதும் சாதாரண துணியை காட்டிலும் மைக்ரோபைபர் போன்ற துணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனை கொண்டு கண்ணாடியை துடைத்தால் கண்ணாடி பளபளக்கும். மைக்ரோஃபைபர் துணியானது கண்ணாடி திரையில் கோடுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. எனவே உங்கள் வீட்டில் டீவியை துடைக்கும்போது மைக்ரோ பைபர் துணியைக் கொண்டு துடைப்பது நல்லது.

எல்சிடி, எல்இடி மற்றும் பிளாஸ்மா திரைகளுக்கு திரவங்களை பயன்படுத்தினால் கடுமையான சேதம் உண்டாகும். குறிப்பாக இந்த திரவத்தில் அமோனியா, ஆல்கஹால், அசிட்டோன் போன்றவை உள்ளது. எனவே இவை டிவி கண்ணாடிகளை சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் டிவி, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கண்ணாடி திரைகளை சுத்தம் செய்ய சிறப்புக் க்ளீனிங்கை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

டிவியை துடைக்க ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். இருப்பினும் இப்படி நேரடியாக செய்வது என்பது மிகவும் ஆபத்தானது. இதனால் நீங்கள் ஸ்பிரேயை துணியில் அடித்து பின்னர் டிவியை துடைத்தால் டிவியின் கண்ணாடிக்கு எந்த சேதமும் ஏற்படாது.

நாம் டிவியை துடைக்கும்போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல்-ஐ சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இதில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே டிவி ரிமோட்டை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலான தொலைக்காட்சி பெட்டிகளில் உள்ளமைக்கப்பட்ட இன்பில்ட் ஸ்பீக்கர்கள் காணப்படுகிறது. எனவே நாம் டிவியை சுத்தம் செய்யும்போது ஸ்பீக்கரை சேர்த்து சுத்தம் செய்தால் சத்தம் நன்றாக கேட்கும். ஆனால் ஸ்பீக்கரை ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டாம். அப்படி செய்யும் போது ஸ்பீக்கர் பழுதடைய வாய்ப்புள்ளது.


--

ஞாயிறு, 23 நவம்பர், 2025

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் எத்தகைய பலன்களை பெற முடியும் என்று இங்கே காணலாம்:

1) வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது 'சுகாசனம்' எனப்படும் யோகப் பயிற்சியாகும்.

இந்த நிலை செரிமானத்திற்கு உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

2) தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.

3) தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து உடம்பில் உள்ள வலிகளை குறைக்கிறது. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.

4) அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

5) பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.

6) ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.

7) தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.

8) தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. மேல்வாதம் மற்றும் கீழ்வாதம் முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.



--

புதன், 19 நவம்பர், 2025

மலச்சிக்கல்பிரச்சினை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

மலம் கழிப்பதில் சிரமம் ஒருவரின் தினசரி அட்டவணையில் தலையிடுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

அதற்கான காரணங்கள் பல இருக்கலாம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் வரை.

இது பொதுவாக சமாளிக்கக்கூடியது என்றாலும், மலச்சிக்கல் நாள்பட்டதாக இருந்தால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

மலச்சிக்கலை தவிர்க்க பொதுவான சில தினசரி தவறுகளை தவிர்க்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய 3 விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் உங்களால் உங்கள் குடலை சுத்தம் செய்ய முடியாவிட்டால், உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சீரகம்:

ஜீரகம், ஆயுர்வேதத்தில் ஜீரகா என்று அழைக்கப்படுகிறது. இது ஜீர்னா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது செரிமானம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, இது பசியின்மை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி ஆகியவற்றிற்கு அற்புதமானது. ஆனால் மலச்சிக்கலுக்கு அல்ல.

ஆகவே, சீரகத்தை மலச்சிக்கல் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம்.

தயிர்:

தயிர் சுவையானது, இயற்கையில் சூடான தன்மை கொண்டது. இது மேலும் மனம் மற்றும் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் நிர்வகிக்கிறது. இது இயற்கையில் உறிஞ்சக்கூடியது மற்றும் ஜீரணிக்க கடினமானது. இது "மலச்சிக்கலுக்கு பொருந்தாது." எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், குணமாகும் வரை தயிரை தவிர்க்கவும்.

காஃபின்:

காஃபின் நமது செரிமான அமைப்பில் உள்ள தசைகளைத் தூண்டி, குடலின் எளிதான இயக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் காஃபின் (குறிப்பாக அதிகப்படியான காஃபின்) நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இது எதிர் விளைவைக் கொடுக்கும் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், அதைத் தவிர்க்கவும்.

உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவர் டீ/காபியுடன் தங்கள் நாளை "தொடங்கக்கூடாது". "அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அல்லது 1 டீஸ்பூன் பசு நெய்யுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள், குறிப்பாக உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் இதனை செய்ய வேண்டும்.



--

பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு வரும் பிரச்சனைகள்

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் , கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள...

Popular Posts